Oct 3, 2015

“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை

எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான்.
நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை எவருமே கற்பனை செய்ய முடியாதளவிற்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.  அல் குர்ஆன். 32;17.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார் படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான்.
(சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே! என்று கூறி நபி(ஸல்) அவர்கள் 32:17 குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: முஸ்லிம். 5438, 5439. 5440.
சொர்க்கமானது மனிதக்கற்பனைக்கும் அப்பாற்பட்ட மேலான இடம் என்று கூறும் இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )