Oct 28, 2011

குர்பானியின் சட்டங்கள்


இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.அறிவிவப்பவர் பரா ரளியல்லாஹு அன்ஹுநுல் புகாரி (955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்



''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும்பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள்அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
இரு பெரு நாட்கள்
''அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களுக்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான்அவைஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!)மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு தெரிவித்தார்கள். (ஆதாரம் அபூ தாவூது நஸயீ)
ஈதுல் ஃபித்ர் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும்ரமளான் மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது.
ஈதுல் அள்ஹா இறை ஆணைப்படி நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் மகன் இஸமாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பலியிட முன்வந்த இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படும் பெருநாளாகும்.
குர்பானி கொடுக்கப்படுவதால் ''ஈதுல் அள்ஹா'' என்றும் ''குர்பான் ஈத்'' என்றும் எகிப்துதுருக்கி போன்ற நாடுகளில் ''ஈத் பைராம்'' என்றும்மாட்டை அறுத்துப் பலியிடுவதால் ''பகர் ஈத்'' (பக்ரீத்என்றும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
பெருநாளை எவ்வாறு கொண்டாடுவது ?
நோன்புப் பெருநாளுக்கும்ஹஜ்ஜுப் பெருநாளுக்கம் ஒரே விதிகள் தான்என்றாலும் இரண்டிலும் சிறிது வேறுபாடுகள் உள்ளனஇரு பெருநாட்களைப் பற்றியும் அறிவது அவசியமாகும்.
1. பெருநாளன்று ஒவ்வொரு முஸ்லிமும் குளித்துப் புத்தாடை புனைவது ஸுன்னத்தாகும்ஆடை அணிவதில் ஆடம்பரம் கூடாது.
தொழுகைக்குச் செல்லு முன் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்துவிட்டுச் செல்வார்கள். (அறிவிப்பவர்நாஃபிஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்முவத்தா. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் ஒவ்வொன்றையும் தவறாது கடைபிடிக்கும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈதுப்பெருநாள் தொழுகைக்குப் புறப்படுமுன் குளிப்பார்கள்அவர்கள் இரு பெருநாட்களுக்கும் ஆடைகளில் மிக அழகான ஆடையை உடுத்துபவர்களாக இருந்தார்கள்என இப்னுல் கையிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். (ஸாதுல் மஆத் 1-442)2. ஆண்கள் நறுமணம் பூசிக்கொள்வது நபிவழியாகும்.
3. பெண்கள் புத்தாடை அணியலாம்ஆனால் நறுமணம் போன்ற வாசனைத் திரவியங்கள் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.4.
பெண்களும் பெருநாள் தொழுகைக்காக ''ஈத்காஹ்'' என்னும் மைதானம் சென்று தொழுது வரவேண்டும்அவர்கள் ஆண்களுடன் கலக்காது தனியாக ஒதுங்கிச் செல்லவண்டும்.
5. பெருநாள் தொழுகை ஸுன்னத் முஅக்கதா
பெருநாள் தொழுகை ஸுன்னத் முஅக்கதாவலியுறுத்தப்ட்ட ஸுன்னத்தாகும்இது வாஜிப்-கட்டாயத்தொழுகை என்றும் சில இமாம்கள் கூறுகின்றனர்எதுவாயினும் இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய ஒரு முக்கியமான தொழுகையாகும்ஜாபிர் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு ஜாபிர் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு இதை தவறவிடாது தொழுவதற்கு ஆண் பெண் இருபாலரும் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
6. பெண்கள் சிறுவர்களின் மீதும் கடமை
1. மாதவிடாய்,பிள்ளைப்பேறுஇரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட பெருநாள் தொழுகை நடை பெறும் முஸல்லா-ஈத்காஹ்திடலுக்கு வருகை தந்து பங்கேற்பதும் அங்கே நடைபெறும் குத்பாப் பேருரையைக் கேட்பதும் ஸுன்னத்தாகும்இவர்கள் தொழாமல் அங்கே அமர்ந்திருக்கவேண்டும்.
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''பருவமடைந்த பெண்களையும்,மாதவிலக்கான பெண்களையும் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் துஆவிலும் கலந்து கொள்வதற்காக இரு பெருநாட்களின் தொழுகை(திடலு)க்கு அனுப்பி வைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்ஆனால் மாதவிலக்கான பெண்கள்,தொழும் இடத்தில் (சற்று விலகிஓரமாக இருக்கவேண்டும்.'' (ஆதாரம்புகாரி-974, முஸ்லிம்)2.பெருநாள் தொழுகைகளுக்கு சிறுவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும்நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சிறுவராக இருக்கும் போது பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புகாரி-975)
7. தொழுத பிறகு உண்ணுவது
நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது பேரீத்தம் பழம் போன்ற உணவுகளை உண்டு விட்டுச் செல்வதும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது எதுவும் உண்ணாமல் செல்வதும் ஸுன்னத்தாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்காகச்செல்ல மாட்டார்கள்ஈதுல் அள்ஹா பெருநாளில் தொழாதவரை சாப்பிடமாட்டார்கள் என இப்னு புரைதா தன் தந்தையின வாயிலாக அறிவிக் கிறார்கள். (ஆதாரம்அஹ்மத், திர்மிதி,இப்னு ஹிப்பான்)
8. தக்பீர் சொல்லுவது!
ஆண்கள் சப்தமாக தக்பீர் சொல்லுவதும் பெண்கள் மெதுவாக தக்பீர் சொல்லுவதும் ஸுன்னத் நபிவழியாகும்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதிலிருந்து தொழுமிடம் வரும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்'' என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.தக்பீரை கூட்டாக -கோரஸாகசப்தமிட்டுக் கூறுவதற்கு நபி மொழிகளில் எந்த ஆதாரமும் இல்லைநபிகளாரின் காலத்திலோ அவர்களின் பிறகு நல்லாட்சி புரிந்த ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் காலத்திலோ,அதன்பிறகோ அவ்வாறு கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நோன்புப் பெருநாளின்போது பிறை பார்த்த இரவிலிருந்து பெருநாள் அஸர் வரை தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளின் போது பிறை ஒன்பது பஜ்ரிலிருந்து 13 அஸர் வரை தக்பீர் கூறுவது சுன்னத்தாகும்.பிறை ஒன்று முதல் 13 அஸர் வரை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள்எனவே ஒன்று முதல் 13 அஸர் வரை தக்பீர் சொல்லலாம்.
தக்பீர் சொல்லும் முறை
الله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد
அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர்., லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
9. ஈத் தொழுகைக்காக நடந்து செல்வது
பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வது நபி வழியாகும் என அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் . (ஆதாரம் திர்மிதி)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் தொழுகைக்கு நடந்தே சென்று நடந்தே திரும்பி வருவார்கள். அறிவிப்பவர்அப்துர்ரஹ்மான் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்இப்புனுமாஜா(1070) ஆகவேஈத் தொழுகைக்கு நடந்து செல்வதும்நடந்தே திரும்பி வருவதும் ஸுன்னத்தாகும்.
10. ஈத் தொழுகையின் நேரம்
சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபிவழியாகும் (புகாரி,அபூதாவூது,இப்னு மாஜாஹாக்கிம்)
குறிப்புபொழுது புலர்ந்து சுமார் இருபது நிமிடங்கள் வரை தடுக்கப்பட்ட நேரமாகும்அதன் பின்னர் தொழலாம்.
11. ஒருவழியாகச் சென்று மறு வழியாக திரும்புவது
பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வழியாகச்சென்று மறுவழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்றவழியாக இல்லாமல்வேறு வழியாக திரும்பி வருவார்;கள்ஏன ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்புகாரி)
இன்று சவூதி அரேபியாவில் இந்த நபி வழியைக் கடைபிடிப்பதால் டிராபிக் நெரிசலை தவிர்ப்பதற்கும்,ஒழுங்கு முறைகளை கடைபிடிப்பதற்கும் வசதியாக இருப்பதைக் காணமுடிகிறது.
12. அதான்இகாமத் கிடையாது
இரு பெருநாள் தொழுகைகளுக்கும் அதான் இகாமத் கிடையாது என ஜாபிர் இப்னு ஸமூராரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதானும் இகாமத்தும் இல்லாமல் பெருநாள் தாழுகையைத் தொழுதுள்ளார்கள்அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்:அஹ்மத்முஸ்லிம்திர்மிதிநஸயீஇப்னு மாஜா.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒருமுறையல்ல., இருமுறையல்ல.பாங்கும் இகாமத்துமின்றி (பலமுறைகள்பெருநாள் தொழுகையைத் தொழுதிருக்கிறேன். (அறிவிப்பவர்ஜாபிர் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்முஸ்லிம்அபூதாவூது,திர்மிதிஅஹ்மத்)
13 பெருநாள் தொழுகைக்கு முன் பின் ஸுன்னத் கிடையாது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்த தொழுகையையும்;) தொழவில்லைஎன்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்அவர்களுடன் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள்ஆதாரம் புகாரி - 989.
14. பெருநாள் தொழுகையும் தக்பீர்களும்
நோன்புப் பெருநாள்ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்களிலும் ஆண்களும் பெண்களும் இந்த சிறப்புத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
பெருநாள் தொழுகை இரு ரகஅத்களாகும்.
முதல் ரகஅத்தில் தனா ஓதிய பிறகு ஏழு தக்பீர்கள் கூறவேண்டும்.கூறும் சமயத்தில் கைகளை உயர்த்தவேண்டியதில்லைபிறகு அல்ஹம்து மற்றும் வேறு சூராக்களை இமாம் சப்தமிட்டு ஓதவேண்டும்.
இரண்டாம் ரகஅத்தில் அல்ஹம்து ஓதுமுன் ஐந்து தக்பீர்கள் கூறவேண்டும்இதிலும் கைகளை உயர்த்த வேண்டியதில்லை.அதைப்போல தக்பீர்களுக் கிடையில் எதையும் ஓதவேண்டியதில்லை.
ஏழும் ஐந்தும் தக்பீர்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஈதுல்பித்ர்,ஈதுல் அள்ஹாஆகிய இரு பெருநாள் தொழுகைகளில் கிராஅத் ஓதுவதற்கு முன் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர் களும்,இரண்டாம் ரக்அத்தில் கிராஅத் ஓதுவதற்கு முன் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள்அறிவிப்பவர்அம்ர் இப்னு அவ்ஃப்ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்திர்மிதி.
சூராக்கள்
பெருநாள் தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காஃப் என்ற அத்தியாயத் தையும்கமர் என்ற அத்தியாயத்தையும் ஓதியிருக்கிறார்கள்சிலவேளை அஃலா என்ற அத்தியாயத்தையும்காஷயா என்ற அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்அறிவிப்பவர்அபூவாகித்ரளியல்லாஹு அன்ஹு  ஆதாரம்அஹமத்முஸ்லிம்திர்மிதிநஸயீஇப்னு மாஜா.
''இரு பெருநாள் தொழுகைகளில் ''ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா'' என்ற அத்தியாயத்தையும், ''ஹல் அதாக்க ஹதீஸுல் காஷயா'' என்ற அத்தியா யத்தையும் ஓதுவார்கள்''. அறிவிப்பவர்:ஸமுரா ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்அஹ்மத்,,தப்ரானி.
குத்பா உரை 
தொழுகை முடிந்த பிறகே குத்பா உரை நிகழ்த்தவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர்ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் குத்பாவுக்கு முன்பே இரண்டு பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றுவார்கள்அறிவிப்பவர்இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்புகாரி,முஸ்லிம்திர்மிதிநஸயீ.
குத்பா உரையை கேட்பது
ஜும்ஆ உரையைப் போன்று பெருநாள் குத்பா உரையையும் காது தாழ்த்திக் கேட்பது அவசியமாகும்.இன்று இதன் முக்கியத்துவம் புரியாது பலர் குத்பாவைக் கேட்காது எழுந்து சென்று விடுகின்றனர்.
கன்னிப்பெண்கள்,மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இமாமின் குத்பா-பிரச்சார-உரைiயில் கலந்து கொள்ளவேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியது பெருநாள் உரையைக் கேட்பதற்குத்தானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல.
15. தொழுமிடம் முஸல்லா
பெருநாள் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஈத்காஹ்திடலில் தொழுதுள்ளதால் பள்ளியில் தொழாமல் திடலில் தொழுவதே சிறப்பாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) ''முஸல்லா'' என்னும் திடலுக்குப் புறப்படுவார்கள்அறிவிப்பவர்இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்புகாரி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே ஒரு தடவைதான் (மழை காரணமாக)பள்ளியில் தொழுதுள்ளார்கள்.
16. பெருநாளில் பிரார்த்தனை (துஆ)
பெருநாள் தொழுகையும்உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும்,மாதவிடாய்ப் பெண் உட்பட அனைத்துப் பெண்களும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு நாங்கள் புறப்படவேண்டும் எனவும்கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும்மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள்ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள்.அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்துவத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்அறிவிப்பவர்உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஆதாரம்புகாரி-971.
இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும்புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் நாம் பிரார்த்தனை (துஆசெய்து கொள்ள வேண்டும்.
17. ஈத் பெருநாளும் ஜும்ஆவும் ஒன்றாக வந்தால்
ஈத் பெருநாளும் ஜும்ஆவும் ஒரேநாளில் ஒன்றாக வந்தால்ஈத் தொழுகையை நிறைவேற்றியவர் ஜும்ஆத் தொழுகையை தெழாமலிருக்கலாம்அல்லது இரண்டையும் தொழலாம்.
18. பெருநாளன்று வாழ்த்து தெரிவிப்பது
நான் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு போன்ற நாயத் தோழர்களுடன் இருந்தபோது பெருநாள் தொழுகை முடிந்து திரும்பியதும் அவர்களில் ஒருவருக்கொருவர்,تقبل الله منا ومنك ''தகப்பலல்லாஹு மின்னாவமின்கஎன்று கூறிக்கொள்வார்கள்என முஹம்மது இப்னு ஸியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்அஹ்மது இப்னு ஹன்பல் இந்த ஹதீஸின் இஸ்னாத் தரம் சிறந்தது எனக் கூறுகிறார்கள். (அல்ஜவ்ஹருந்நகிய்யி 3-320)
19. மார்க்கத்திற்கு முரணானவை நிகழாது காத்தல்
''பெருநாள் என்றாலே பொழுது போக்கும் நாள்ஆரவாரமிக்க நாள்உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நாள்'' எனக் கருதிக் கொண்டு நம்மில் பலர் வேடிக்கை விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும்திரைப்படங்களைப் பார்ப்பதிலும் பொழுதைக் கழிக்கின்றனர்ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்து பலநிகழ்சிகளில் பங்கேற்கின்றனர்மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகள்வைபவங்களை தவிர்த்து மாண்பார் துல்ஹஜ்ஜின் பேறுகள் அனைத்தையும் பெறுவதற்கும்அந்நாட்களில் அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் வல்லான் அல்லாஹ் அருள் புரிவானாக!

Oct 21, 2011

ஹஜ் செய்யும் முறை

இஹ்ராம் கட்டுவது :  

                                                                ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும்., இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும். : "லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' நூல்: புகாரி 1549, 5915, சப்தத்தை உயர்த்த கூற வேண்டும். நூல்கள்: ஹாகிம், பைஹகீ

தவாஃப் அல்குதூம்' செய்யும் முறை : 

                                                           கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 1644, 1617, தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நூல்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607
 
                                                            ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையி-ருந்து துவக்க வேண்டும்.: கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையி-ருந்து துவக்க வேண்டும். நூல்கள்: முஸ்-ம் 2213, 2214

தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை : 

                                                            ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே ""ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்'' என்று சொல்ல வேண்டும். நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616 
ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது : 

                                                          ஹஜருல் அஸ்வதைத் தொட்டு கையை முத்தமிட்ட வேண்டும்.. புகாரி 1606 , நெருக்கம் அதிகமாக இருந்தால் கையால் அதைத் தொடுவது போல் சைகை வேண்டும். புகாரி 1612, 1613, 1632, 5293 ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும். புகாரி 166, 1609 

                                                            தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம் : தவாஃப் செய்து முடித்தவுடன் "மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம். "மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற (2:125) வசனத்தை ஓதி இரண்டு ரக்அத்கள் தொழு வேண்டும். அத்தொழுகையில் "குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும், "குல்ஹுவல்லாஹு அஹத்' சூராவையும் ஓத வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 .

ஸஃபாவை அடைந்ததும்: 

                                                         "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்'' என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முத-ல் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவி-ருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்- ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸப்ப வஹ்தா'' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். நூல்கள்: முஸ்-ம் 2137

மினாவுக்குச் செல்வது: 

                                                            துல்ஹஜ் மாதம் ஏழாம் நான் லுஹருக்குப் பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்ற "மினா' எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்., நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656 
அரஃபா வுக்குச் செல்வது: 

                                                    மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு "அரஃபா'வுக்குப் புறப்பட வேண்டும். அரஃபாவுக்குச் செல்லும் வழியில் "தல்பியா' கூறிக்கொண்டும் "தக்பீர்' கூறிக்கொண்டும் செல்ல வேண்டும். நூல்: புகாரி 970, 1659 அரஃபா நாளில் நோன்பு நோற்பது: அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. பார்க்க: புகாரி 1658, 1663, 5618, 5636 
அரஃபாவில் தங்குவதன் அவசியம்: 

                                 அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது. ""ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான்.நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814 ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி., அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம். நூல்: முஸ்-ம் 2138 அரஃபாவில் லுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார் அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பா உரையை செவிமடுக்க வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 பிரார்த்தனை செய்ய வேண்டும். நூல்: நஸயீ 2961 

                                                                  முஸ்த-ஃபாவுக்குச் செல்வது: அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு சூரியன் மறைந்ததும் முஸ்த-ஃபாவுக்குச் சென்ற மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழவேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி சுப்ஹ் தொழ வேண்டும். நூல்: முஸ்-ம் 2137

மீண்டும் மினாவுக்குச் செல்வது :

                                                             முஸ்த-ஃபாவில் பஜ்ரைத் தொழுததும் "மஷ்அருல் ஹராம்' என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப் படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு என்ற நன்கு வெளிச்சம் வரும் வரை கூற வேண்டும். நூல்: முஸ்-ம் 2137 
மினாவில் செய்ய வேண்டியவை:  

                                                               இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் ப-யிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். "ஜம்ரதுல் அகபா' என்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். அதன் பிறகு "ஜம்ரதுல் உஸ்தா' எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள். அதன் பிறகு "ஜம்ரதுல் ஊலா' எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குள்ஸமா
ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். (புகாரி 1753) எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும். (முஸ்-ம் 2289 

குர்பானி கொடுத்தல்:

                                    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம். நூல்: முஸ்-ம் 2128, 2323. (அல்குர்ஆன் 2:196)
அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே நம் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் சார்பாக அ- ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் குர்பானி கொடுக்க நியமணம் செய்துள்ளனர். மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர். 

தலை மழித்தல்: 

                                                        பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். "இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் ""முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்'' (மன்னிப்பாப்க என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். "இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக'' என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் ""முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்'' என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல்: புகாரி 1727 அவ்வாறு செய்ததும் அவர் இஹ்ராமி-ருந்து ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுகிறார். 
பெண்கள் தலை மழித்தல்: 

                                                    "தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு' நூல்: அபூதாவூத் 1694 
தவாஃப் அல் இஃபாளா : 

                                                      பத்தாம் நாள் அன்று மினாவில் "ஜம்ரதுல் அகபா'வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும். நூல்: முஸ்-ம் 2307 

தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை : 

                                   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "தவாஃப் அல் குதூம்' செய்யும் போது மூன்று தடவை ஓடியும் நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும். நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051 பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். புகாரி 396, 1600, 
ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஈயும் செய்ய வேண்டும்:
 
                                                       இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமி-ருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் கட்டிய காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது. நூல்கள்: புகாரி 319, 1562, 4408
 
பெருநாள் தொழுகை கிடையாது: 

                                                          பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது "அள்பா' எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ர-) நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
தவாஃபுல் விதாஃ : 
   
                                  மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது. நூல்: முஸ்-ம் 2350, 2351 

                                                           தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். இதைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம். ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை வரிசையாக இது வரை நாம் அறிந்தோம்.


- P.ஜைனுல் ஆபிதீன் உலவி
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )