Jun 14, 2013

சகிப்புத் தன்மை

உலகில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் சகிப்புத் தன்மைஇல்லாததுதான்!

உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள்.
உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம்.
எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.
(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)
பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.
ஆனால்... உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.
கோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம்தான். கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன், அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (உ.ம்) தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்ஸ உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்து விடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.

ஊனமுற்றவர்களை இறைவன் ஏன் படைத்துள்ளான்?




இறைவன் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்கள் இப்படி ஏன் படைத்துள்ளான்?
இக்கேள்விக்கான விடையைக் காண்பதன் முன்னால் ஒரு சில மறுக்கமுடியாத உண்மைகளை நாம் நினைவுறுத்திக் கொள்ளவேண்டும். அதாவது, இவ்வுலகம் என்பது ஓர் தற்காலிக பரீட்சைக் கூடம் போல படைக்கப் பட்டுள்ளது என்பதையும் இங்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குக் குறித்த தவணையில் வந்து போகிறார்கள் என்பதையும் நாம் தொடர்ந்து காண்டு வருகிறோம்.
இது எதற்காக?
இவ்வுலகைப் படைத்த இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான் :
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அதாவது இந்த தற்காலிக பரீட்சை வாழ்வில் பலரும் வெவ்வேறு விதமான சோதனைகள் கொடுக்கப் பட்டு பரீட்சிக்கப் படுகிறார்கள். இப்பரீட்சை முடிந்தபின் அவரவர்களின் செயல்பாட்டுக்கேற்ப அதாவது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகத்தையோ சொர்க்கத்தையோ வழங்க உள்ளான். அதையும் இவ்வாறு இறைவன் திட்டவட்டமாகத் தன் திருமறையில் கூறுகிறான்.
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
இந்தப் பரீட்சையை எவ்வாறு நடத்துவது என்பதை நன்றாக அறிந்தவனும் அதன்பால் முழுமையான அதிகாரம் கொண்டவனும் அவன் மட்டுமே! உலகத்தின் படைப்பில் நாம் எவ்வாறு எந்தக் குறைகளையும் காண இயலாதோ அதுபோலவே அவனது எந்த ஏற்பாட்டிலும் எந்தவிதமான குறைபாடும் இல்லை.நமக்கு கொடுக்கப் பட்டுள்ள சிற்றறிவைக் கொண்டு நாம் புரிந்து கொண்ட விதத்தில்தான் ஏதோ குறைபாடு இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இறைவன் யாருக்கும் அநீதி இழைப்பவனும் அல்ல, மறதி உடையவனும் அல்ல தவறு இழைப்பவனும் அல்ல என்பதைத் திருமறை வசனங்கள் கூறுகின்றன.
இனி உங்கள் கேள்வி பற்றி ஆராய்வோம் வாருங்கள் ...

Jun 7, 2013

தக்வா டிரஸ்ட் இன் பரிசளிப்பு நிகழ்ச்சி

இளையான்குடி தக்வா டிரஸ்ட் சார்பாக " இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 26.05.2013 ஞாயிற்று கிழமை அன்று " தக்வா டிரஸ்ட் " அலுவலகத்தில்  நடைபெற்றது. இதில் எ.தஸ்னீம் பாத்திமா முதல் பரிசு பெற்றவராகவும், A.தாஜுல் நிசா, S.மிஹ்ராஜ் நிசா ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றவராகவும் A.அஸ்பர் யாஸ்மின், K.S. இஜாஸ் பாத்திமா, K.U.சமீம் இம்தியாஸ் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

Jun 4, 2013

வட்டி! - ஒரு முழுமையான இஸ்லாமிய கண்ணோட்டம்



1. வட்டி என்றால் என்ன?
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
3. வட்டி ஒரு பெரும் பாவம் 
4. வட்டி ஒரு கொடிய குற்றம்    
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள்     
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை  
7. போர்ப் பிரகடணம்
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை    
9. அடமானம்   
10. ஒத்தி வட்டியா?    
11. பேங்க்கில் பணம் போடலாமா?    
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?    
13. குலுக்கல் சீட்டு    
14. தவணை முறையில் பொருள் வாங்குவது  
15. வங்கியில் வேலை செய்வது
16. பகடி கூடுமா?
17. முடிவுரை
  வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'  
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
  1. வட்டி என்றால் என்ன?  
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)

பறிபோகும் அகீதா - பலவீனமாகும் ஈமான்!



இஸ்லாத்தின் தனிச் சிறப்புகளில் முதன்மையானது, அதன் இறையியல் கொள்கைதான். உலகமே இறையியல் கொள்கையில் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், இஸ்லாம்தான் தெளிவான இலக்கணம் வகுத்தது; திருக்குர்ஆன் அதற்கு வழி வகுத்தது.
இருக்கின்றான் இறைவன்; ஒருவனே அவன். இதுதான் இஸ்லாத்தின் இறையியல் அடிப்படை. இதன் மூலம், கடவுள் இல்லை என்ற இறைமறுப்பையும் (குஃப்ர்) பல தெய்வங்கள் உள்ளன என்ற இணைவைப்பையும் (ஷிர்க்) இஸ்லாம் ஒரே நேரத்தில் நிராகரித்தது.
(நபியே!) கூறுவீராக: அல்லாஹ் (இறைவன்) ஒருவன்; அவன் எந்தத் தேவையுமற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவில்லை; அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை; அவனுக்கு நிகர் யாருமில்லை. (அல் குர்ஆன் 112)
இந்த அத்தியாயம், முழு குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புகாரீ). அதாவது குர்ஆனின் கருத்துகளை மூன்று பாகங்களாகப் பிரித்தால், அதில் ஒரு பாகம், ஓரிறைக் கொள்கையாகவே (தவ்ஹீத்) இருக்கும். மற்ற இரு பாகங்கள் செய்திகள், விதிகள் ஆகியவையாகும்.
உலகமே வரையறுக்கப்பட்ட ஒரு விதியின்கீழ் இயங்கிவருகிறது. அவ்விதியை உருவாக்கியவனே இறைவன். இறைவன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், உலகம் சீர்குலைந்திருக்கும் (அல் குர்ஆன் 21:22). ஒவ்வொருவனும் தன் படைப்புகளைத் தனியாகப் பிரித்து தனிக்கட்சி ஆரம்பித்திருப்பான். (அல் குர்ஆன் 23:91)
இறைவனின் தனித்தன்மைகள்
எகிப்து சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் (ஃபாரோ) தன்னையே கடவுள் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவன். இறைத்தூதர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், "நீ கடவுள் அல்ல; உன்னையும் எங்களையும் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான்" என்றனர். நீங்கள் சொல்லும் அந்த இறைவன் யார் என்று சர்வாதிகாரி திருப்பிக் கேட்டான்.

சுன்னாவும் சஹாபாக்களும்



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள் "சஹாபாக்கள்'' எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னாவைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். இன்னும் உங் கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான் என்று (நபியே) கூறுவீராக. (3:31)
அல்லாஹ்வின் பாவமன்னிப்பும் அருளும் கிடைப்பதற்கு இறைத் தூதரை முழுமையாக நேசித்து தங்களது வாழ்க்கையின் செயற் பாடுகளுக்கு முன்மாதிரியாக கொண்டு செயலாற்றுவது இன்றி யமையாதது என்றும் நம்பினார்கள்.
உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவுவைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (33:21)
மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த சஹாபாக்கள் ஒவ்வொரு அசைவிலும் நபிகளாரின் அடிச்சுவடையே முன்மாதிரியாக கொண்டு பின்பற்றினர். வஹியைக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து காரியமாற்றினார்கள். இந்த உலகத்திலுள்ள எந்த மனிதனுடைய வார்த்தைகளையும் செயல்களையும் விரும்பினால் ஏற்கலாம் விரும்பினால் நிராகரிக்கலாம். ஆனால் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளையும் செயல்களையும் அவ்வாறு கணிக்க முடியாது என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார்கள். 

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்




அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
''எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்:
'அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்.
மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும்.
இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்!'' (அல்குர்ஆன் 41 : 30-32)
''திண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.'' (அல்குர்ஆன் 46 : 13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )