Nov 8, 2010

திருக் குர்ஆன் கூறும் தேனும் தேனீயும்

தேனீ....
                இது திருக் குர்ஆனில் ஓர் அத்தியாயம்! திருக்குர் ஆணின் 15 வது அத்தியாயமான இதன் மொத்த வசனங்களும் தேனீயைப் பற்றிப் பேசவில்லை. 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டுமே தேனையும், தேனீயையும் பற்றிப் பேசுகின்றன.
                திருக்குர் ஆனின் நடையைத் தெரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும். 286 வசனங்கள் கொண்டு குர் ஆனிலேயே மிகப் பெரும் அத்தியாயமாகத் திகழும் ஓர் அத்தியாயத்திற்கு அல்பகரா - மாடு என்று பெயர். அந்த அத்தியாயத்தில் 67 முதல் 70 வரையிலான வசனங்களில் மாடு தொடர்பான நிகழ்ச்சி இடம் பெறுவதால் இந்தப் பெயர். அது போன்று தான் தேனீ என்ற இந்த அத்தியாயத்தில்  68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டும் தேனீயை பற்றி - தேனை பற்றி பேசுகின்றன.
               இந்த இரண்டு வசனங்களும் விலங்கியல் - zoology என்ற ஒரு துறையே இல்லாத காலத்தில், எதையும் நுணுகிப் பார்க்கும் நுண்ணோக்கிகள் இல்லாத கால கட்டத்தில் இன்றைய அறிவியல் உலகம் அதிர்கின்ற வகையில், தேனீக்கள் பற்றி அன்று வெளிவராத ரகசியங்களை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கின்றன.
              தேனீக்கள் கட்டுகின்ற கூடுகள், அவை சென்று வருகின்ற பாதைகள் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவரும் பானம், அதன் பல வண்ணங்கள், தேனில் ஏற்படும் நிவாரணம் என்று இவ்விரு வசனகளில் தேனீ மற்றும் தேன் பற்றிய அதிசயங்களையும், அற்புதங்களையும் கூறிய பின்னர் ' சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது' என்று முத்தாய்ப்பாகக் கூறப்படுகிறது. அந்தச் சான்று என்ன? என்பதை அறியவே நமது தேடல் தொடர்கிறது.

படைப்பின் ரகசியங்கள்

            பொதுவாகவே உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டிருக்கின்றன. இதை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
              அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். 
                                                                                              அல் குர்ஆன் 2:௨௯
             இதன் படி ஊர்வன, பறப்பன, மிதப்பான மற்றும் மரம், செடி, கொடிகள் ஆகிய அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. 
            கால்நடைகள், கடல் மீன்கள் நமக்கு உணவாகப் பயன்படுவதன் மூலம் அவற்றின் பயன்பாடு நமக்கு நேரடியாக தெரிகின்றது. அதனால் அவை மட்டும் தான் நமக்குப் பயனுள்ளவை என்று விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்துப் உயிர் வாழ் இனங்களிலும், உயிரற்ற பொருட்களிலும் நமக்குப் பயன் உள்ளவை நமக்குப் பயன்பாடுகள் இருக்கின்றன. மறைமுகப் பயன் உள்ளவை நமக்கு தெரிவதில்லை. அவற்றை இன்றைய அறிவியல் உலகம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதன் மூலம் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் படைப்பின் ரகசியங்களை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.
               தாவரம்! இது தருகின்ற ஆக்சிஜன் மூலம் தான் மனிதன் உயிர் வாழ முடிகின்றது என்பதை இன்றைய அறிவியல் விளக்குகிறது. ஆனால் இது நமக்கு நேரடியாக தெரிவதில்லை. மனித இனத்திற்கு உயிராகவும், கால்நடைகளுக்கு உணவாகவும் உள்ள தாவரம் பெருகுவதற்கு மிக அடிப்படையாக அமைந்திருப்பது மகரந்தச் சேர்க்கை! இதற்கு மிகப் பெரிய அளவில் உதவுவது இந்தத் தேனீக்கள்!

தேனீக்களின் தனித்தன்மை

                மகரந்தச் சேர்க்கைகாக ஆயிரமாயிரம் முகவர்கள் உள்ளனர். மனிதர்கள் அனைவரின் என்னத்தைக் கவர்கின்ற வண்ணத்துப் பூச்சிகள் வட்டமடிக்கும் ரீங்கார வண்டுகள், விளக்கு வெளிச்சத்தில் வந்து சாகின்ற விட்டில் பூச்சிகள், ஈக்கள், பறவைகள், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த வவ்வால்கள், எலிகள் போன்றவை மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் முகவர்கள். காற்றும் இந்த மகரந்தச் க்கேர்க்கைகுரிய ஒரு முகவர் தான். 
               அறிவியல் கருவுர்றிராத காலத்தில் ஆய்வுக்குரிய கருவிகள் கண்டுபிடிக்கப் படாத காலத்தில், எல்லா பொருட்களிலும் ஜோடியைப் படைத்திருப்பதால் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான். 
                பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள். நீங்கள் சிந்திபதர்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம். 
                                                                                   அல் குர்ஆன் 36:36
             தாவர இனத்தின் இந்த ஜோடிகளை இணைக்கும் பணியை மேலே நாம் பட்டியலிட்ட முகவர்கள் நிறைவேற்றி கொண்டிருக்கின்றனர். இதற்குப் பெயர் தான் மகரந்தச் சேர்க்கை!
             இந்த மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் அல்லாஹ் கூறும் ஜோடி என்ற அற்புதம் இல்லை என்றாகி விடும். இந்த ஜோடி என்ற அற்புதம் நிலைக்கவும், நீடிக்கவும் காரணமாக அமைவது மகரந்தச் சேர்க்கை தான்.
              
ஆகாரமே ஆதாயம்

              மகரந்தச் சேர்க்கை மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. 1 . தாவர இனப்பெருக்கம் 2 . மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் முகவர்களுக்குத் தேவையான ஆகாரம். 
              தாவரத்தால் இந்த முகவர்களுக்கு வாழ்க்கை!
             முகவர்களால் தாவரத்திற்கு வாழ்க்கை!
              இந்த முகவர்களின் பட்டியலில் தேனீ மட்டும் மற்ற முகவர்களை விட்டும் வேறுபடுகிறது.
             தாவர இனப்பெருக்கம், தேனீக்களின் உணவு ஆகிய மேலே கூறிய இரண்டு நன்மைகள் போக தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனித சமுதாயதிற்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. 
              இங்கு தான் தேனீ மற்ற முகவர்களை விட வித்தியாசப் படுகிறது. இந்த பலன்களையும் இன்னும் ஏராளமான படிப்பினைகளையும், படைப்பின் ரகசியங்களையும் கொண்டே தேனீ பற்றிய திருக்குர் ஆனின் பார்வையும் அமைந்திருக்கிறது. 
              இந்த வசனங்களின் இறுதியில் எல்லாம் வல்ல அல்லாஹ் 'சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது' என்று குறிப்பிடுவதால் அந்தச் சான்றைப் பார்ப்பது நமது கடமையாகும்.
              சிந்திக்கும் சமுதாயத்திற்கு சான்று என்று அல்லாஹ் திர்க்குர் ஆனில் கோடிட்டுக் காட்டும் செய்திகள் எல்லாம் சாதாரண செய்திகளாக இல்லை! அவை மகத்தான விசயங்களை, படைப்பின் மாபெரும் அற்புதங்களையும் தெரிவிகின்றன.
              அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஓர் ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடிகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
                                                                                       அல்குர் ஆன் 13:3
              விரிந்து கிடக்கும் பூமி, உயர்ந்து நிற்கும் மலைகள், ஓடுகின்ற ஆறுகள் போன்றவை பற்றி இந்த வசனம் தெரிவிக்கின்றது.
               அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீட்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்க அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்று இருக்கிறது.
                                                                                        அல்குர் ஆன் 16:11
                 தாவரப் படைப்பின் அற்புதத்தை இந்த வசனம் தெரிவிக்கிறது.
                 நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே உங்கள் துணைவியாரைப் படைத்தது உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 
                                                                                          அல்குர் ஆன் 30 : 21 
                மனித இனத்தில் உள்ள ஜோடிகளைப் பற்றி இந்த வசனம் கூறுகின்றது.
                உயிர்களை அவை மரணிக்கும் நீதிலும், மரணிக்கதவர்ரை அவற்றின் உறக்கதிதிலும் அல்லாஹ் கைப்பற்றுகின்றான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதை தனது கைவசத்தில் வைத்து கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.                                                                           அல்குர் ஆன் 39 : 42 
                 இவ்வசனம் மனித இனத்தின் அற்புதத்தை விளக்குகிறது.
                வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப் பயன் படச் செய்தான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
                                                                                             அல்குர் ஆன் 45 : 13 
                 வானம், பூமி ஆகியவை மனிதனுக்கு வசப்பட்டிருபதை பற்றி இவ்வசனம் கூறுகிறது. 
                  இவ்வுலக வாழ்க்கைக்கு உதரரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் aththanneer கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ட்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப் பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்ர்களைத் தெளிவு படுத்துகிறோம்.
                                                                                                          அல்குர் ஆன் 10 : 24
                   இந்த வசனம் விளைச்சலைப் பற்றி விவரிக்கின்றது.
                   இந்த வசனங்களிலும் இறுதியில் ' சிந்திக்கும் சமுதாயத்திற்கு சான்று இருக்கிறது' என்று கூறுகின்றான். இவ்வாறு அல்லாஹ் பட்டியல் போடுகின்ற அற்புதப் படைப்புகளுக்கு மத்தியில் தான் தேனீயைப் பற்றிய சான்று சமுதாயதிருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

சிந்தனையும் ஒரு வணக்கமே!

                   podhuvaaka தொழுவது, நோன்பு நோற்பது , ஜகாத் வழங்குவது, ஹஜ் செய்வது போன்றவை தான் வணக்கம் என்று நாம் விளங்கி வைத்திருக்கிறோம். அல்லாஹ்வுடைய படைப்பின் ஆற்றலைப் பற்றியும், அற்புதத்தைப் பற்றியும் நாம் செய்கின்ற சிண்டஹ்னையை யாரும் வணக்கமாகக் கருதுவது கிடையாது.
                   வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் ullana. அவர்கள் நின்றும், அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். " எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!" (என்று அவர்கள் கூறுவார்கள்) 
                                                                                       அல்குர் ஆன் 3:190,191
                   இந்த வசனங்களில் அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்திப்பதையும் வணக்கத்தின் பட்டியலில் இறைவன் சேர்த்திருக்கிறான். இதன் படி அவனது படைப்பைப் பற்றிய சிந்தனை. ஆய்வு மிகச் சிறந்த வணக்கமாக அமைகின்றது. 
                   அவனுடைய padaippaarralaip பற்றி எண்ணி வியப்பது, சுபுஹானல்லாஹ் என்று கூறி   அவனது படைப்பைப் போற்றுவது நமக்கு நன்மையை பெறத் தரும் வணக்கமாக ஆகி விடுகின்றது. அந்த அடிப்படையில் அல்லாஹ் தேனீயில் கூறும் சான்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
                   இன்று மனித சமுதாயத்தின் மொத்த உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி, இந்தப் பூச்சியினங்கள் தாவரத்தில் செய்கின்றான் மகரந்தச் க்கேர்க்கயினால் தான் கிடைக்கின்றது. இந்த மகரந்தச் சேர்க்கையில், மனித சமுதாயத்தின் உணவாக விளங்கும் தாவரங்களின் இனப் பெருக்கத்தில் அதிகமான அளவில் ஈடுபடுவது தனி தான் என்று இன்றைய அறிவியல் கூறும் போது அல்லாஹ்வின் இந்தச் சிறிய , அறிய அற்புதப் படைப்பை எண்ணி வியக்கிறோம். சுபுஹானல்லாஹ் என்று சொல்லி வியக்கிறோம்.

                

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

                                காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை.
                                ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதயும், அந்தச் செயல்களைச் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன என்பதையும் இஸ்லாம் சொல்லி தருகின்றது.
                               படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளுச் செய்வது போன்று உளூ  செய்ய வேண்டும்.
                               பராபின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
                               " நீ உன்னுடைய படுக்கைக்கு செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிததில் கூறினார்கள்.
                                                                                          நூல் : புகாரி 247
                               இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைபிடிப்பதில்லை.

படுக்கை விரிப்பை உதறுதல்
                               அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 
                                " நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டி விடுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                         நூல் : புகாரி 7393

ஓத வேண்டிய துஆக்கள் 
                                 
                               "நீங்கள் படுக்கைக்கு செல்லும் போது, ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேஇருப்பார் . காலை நேரம் வரை சைத்தான் உங்களை நெருங்க மாட்டான்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
                                                                                      அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரலி)
                                                                                                     நூல் : புகாரி 3275
                                  மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.
                                "எவர் அல்பகரா எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                       அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி) 
                                                                                                       நூல் : புகாரி 5009
                                   மேலும் படுக்கைக்கு செல்லும் போது திருக் குர் ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி, நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.
                                 நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்கு சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், "குல்ஹுவல்லாஹு அஹத், குல்அவுத்து பிரப்பில் ஃபலக் , குல் அவூது பிரப்பின்னாஸ்" ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு ) தமது உடலில் இயன்ற வரை தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
                                                                                         அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
                                                                                                          நூல் : புகாரி ௫௦௧௭
                                  பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும்.
                               பிஸ்மிக்க ரப்பீ, valadhu ஜன்பீ வபிக்க அற்பவுஹூ, இன் அம்சக்த நப்சீ பர்ஹம்ஹா வ இன் அர்சழ்த்தஹா பஹ்பல்ஹா பீமா தஹ்பளு பிஹி இபாதக்கஸ் 
சாலிஹீன்.
                               பொருள் : என் அதிபதியே! உன் பெயரால் நான் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பாயாக! அதை நீ (கைப்பற்றாமல்) விட்டு விட்டால் உன் நல்லாடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பையோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!
                                                                                         அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 
                                                                                                         நூல் : புகாரி 7393
                       
                               அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா
                                  பொருள் : இறைவா! உன் பெயரால் மரணிகின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன்.
                                                                                          நூல் : புகாரி 6325
                                  இவை அனைத்தையும் ஓதி முடித்த பின் வலப்புறமாக ஒருக்களித்து படுத்து, பின்வரும் துஆவை ஓதி அந்த வார்த்தைகளையே அன்றைய தினத்தின் இறுதி வார்த்தைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும். 
                                 "நீ உன்னுடைய படுக்கைக்கு செல்லும்போது தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் வலது கைப்பக்கமாகச் சாய்ந்து படுதுகோல் பின்னர்,
                                 
                                  அல்லாஹும்ம அச்லம்து வஜ்ஹு இலைக்க வபவ் வல்து அம்ரீ இலைக்க வ அல்ஜஃ த்து ளஹ்ரீ இலைக்க ரஃபத்தன் இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜ்அ மின்க்க இல்லா இலைக்க அல்லாஹும்ம ஆமன்து பிகிதாபிக் கல்லதீ அன்சள்த வபி நபியிக்க் கல்லதீ அர்சழ்த்த
                                    பொருள் : யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும், உன்னை பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன் வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன். 
                                  என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூயமையனவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிகொள் " என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
                                                                                   அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆசிப் (ரலி)
                                                                                                  நூல் : புகாரி 247

                                இவ்வாறு உன்னதமான உறங்கும் முறையை இஸ்லாம் போதிக்கின்றது. எனவே இதன் அடிப்படையில் நாமும் செயல்பட்டு, நம் சந்ததிகளையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் செயல்படச் செய்து, நபி மொழியைப் பின்பற்றியவர்களாக அல்லாஹ் என்றென்றும் நம்மை ஆக்கி வைப்பானாக! 

Nov 7, 2010

இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?

                                       அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதிர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள். (அல் குர்ஆன் 2:154)

            இதே கருத்து 3:169 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
      அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்! என்று இந்த வசனங்கள் கூறுவதை முஸ்லிம்களில் சிலர் தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
          
      மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர். எனவே அவர்களை வழிபடலாம்; அவர்களை அழைக்கலாம்; பிராதிக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள்  சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும்.

       இவ்வசனங்கள் நல்லாடியார்கள் மற்றும் மகான்களை கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்ய ஒருவர் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே அருளப்பட்டன.

            இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித் தோழர்களோ, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிராத்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கி கொள்ளவேண்டும்.

                 இவ்வசனங்களை கவனமாக ஆய்வு செய்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களே அறியலாம்.
              
                  2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்" என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள் " என்றும் கூறப்பட்டுள்ளது.

                அவர்கள் உயிருடன் இருப்பதும் நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தரும்.

               3:169 வசனமும் அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.

            3:169 வசனம் " தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்" எனக் கூறுகின்றது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்தவரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

               இவை அனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அளித்த விளக்கம் தான் முக்கியமானது.
                
                 உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்ட போது "அவர்களின் உயிர்கள் பச்சை பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள்.
                                                                                       (நூல் : முஸ்லிம் 3500)

              நியாயத் தீர்ப்புக்குப் பிறகு தான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். எனவே தான் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

              அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா? என்று கேட்டால் செய்யலாம் என்று தான் மாற்றுக் கருத்துடையோர் பதிலளிப்பார்கள் . அவர்கள் நம்மைப் பொறுத்த வரை இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

                    நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிராத்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

                  ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். (பார்க்க அல் குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)

               ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிராத்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிராத்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?

                  அனைத்தையும் படித்துப் பரிபாலித்து  வேண்டும். உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரைப் பிரார்த்திக்க முடியாது.

                 அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டார? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
                        
                    
              

Nov 6, 2010

பெருநாள் தொழுகை

 திடலில் தொழுகை:
                                   நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் முசல்லா என்ற திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள்.
                                        (அறிவிப்பவர் : அபூசயித் அல்குத்ரி(ரலி) நூல் : புகாரி 956 முஸ்லிம் 1612) 
                                                     நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை.
                                        (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி1431 முஸ்லிம் 1616)

தொழும் முறை:
                                நபி (ஸல்) அவர்கள் முதல் ரக் அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக் அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிரா அத்திற்கு முன்பு  கூறுவார்கள். 
                                          (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ( ரலி) 
                                          நூல்கள் : அபூதாவுத் 971, தராகுத்னி, பைஹகி) 

பெருநாள் தொழுகைக்குப் பிறகு சாப்பிடுதல்:
                                நோன்பு பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிடமாட்டார்கள்.
                                            (அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : இப்னுகுஸைமா 1426)

குர்பானி

நோக்கம்: 
                    '(குர்பானி பிராணியான) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடம் உள்ள (இறை) அச்சமே அவனை சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்கு பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!'
                                                                                                                  திருக்குர் ஆன் 22:37

குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை: 
                    'நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையை கண்டால் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடியை வெட்ட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
                                (அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) நூல் : முஸ்லிம் 3999)

பிராணியின் தன்மைகள்:
                     'தெளிவாக தெரியும் நொண்டி, தெளிவாக தெரியும் கண்பார்வை குறைவு, தெளிவாக தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடு உள்ளவைகளை குர்பானி கொடுக்க கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
                              (அறிவிப்பவர் : பராபின் ஆசிப் (ரலி) நூல் திர்மீதி : 1417)
                               'உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.'
                               (அறிவிப்பவர் : அலி (ரலி) nool : நஸயி 4301)

பிராணிகளை அறுக்கும் முறை:
                                'நபி (ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும் தக்பீரும் கூறினார்கள்'. 
                              (முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லஹு அக்பர்' என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது).

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்:
                              ' ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்கு பிறகு உள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.
                               தஸ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்கு உரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.
                               (arivippavar : ஜூபைர்(ரலி) நூல் : தாரகுத்னி )

குர்பானி இறைச்சியை பங்கிடுதல்:
                     (குர்பானி பிராணியிலிருந்து) அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்கதவருக்கும் உண்ணக் கொடுங்கள்.
                                                                                           திருக்குர் ஆன் : 22:36
                               நபி (ஸல்) அவர்கள் தாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்கள்.
                              (அறிவிப்பவர் : அதாபின் யாசர் நூல் : திர்மிதி, இப்னுமாஜா )
இளையான்குடி தக்வா டிரஸ்ட் 
                                                            பதிவு எண் : 24/2010
3/4, கலிபா தெரு, இளையான்குடி - 630 702.சிவகங்கை மாவட்டம்.   

                                                                                                                                                                                                                                  
website: ilayangudithakwatrust.blogspot.com                            E-Mail: ilayangudithakwatrust@gmail.com
                                                                                                                                                                                                                                  
                                                                                                                                                                          தேதி : 09-09-2010

            2010 - ம் ஆண்டு பித்ரா வசூல் மற்றும் விநியோக விபரம் 

                           மொத்த வசூல் : ரூ. 28,110.00/-

விநியோகம்:
                       1.பெரிய குடும்பம் தலா ரூ. 300*57          =  17,000.00                                 
                       2.சிறிய குடும்பம் தலா ரூ.  200*43           =    8,600.00
                       3.இருவர் மட்டும்  தலா ரூ.    150*10        =     1,500.00 
                       4.ஒரு நபர் மட்டும் தலா ரூ. 100*9           =        900.00
                       5.ஏழை நபர் ஒருவருக்கு                            =         10.00
                                                                                                                           
                                                                     மொத்தம்            =    28,110.00
                                                                     
                      
               மொத்தம் 119குடும்பங்களுக்கு
               இந்த வருடம் வழங்கப்பட்டது.

 இந்த வருடம் (2010)பித்ரா மற்றும் ஜகாத் நிதிகளையும் மற்றும் நன்க்கொடைகளையும் வாரி வழங்கிய அனைத்து இளையான்குடி மற்றும் சென்னை, மலேசியா, துபாய் வாழ் இளையான்குடி சகோதர்களுக்கு எங்களுடைய நன்றிகளையும், சலாதினையும் தெரிவித்து கொள்கிறோம். 




Nov 5, 2010

அமைப்பு

                          ஐரோப்பாவிலுள்ள அன்றைய அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் தங்கள் பார்வைகளை அல்குர்ஆனில் செலுதிருப்பர்களனால் தங்கள் அறிவியல் பயணத்தின் பாதையில் அறிவுச் சுடரை பிரகாசிக்க வைக்கும் அல்குரானின் வெளிச்சத்தை கண்டு அதிசயித்து போயிருப்பார்கள்.

                      ஒட்டகம் எவ்வாறு படைகப்படுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது ? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?  பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?(என்பதையும் பார்க்க வேண்டாமா?)
                                                                                                                        அல்குர் ஆன் 88:17-20

                     ஒட்டகத்தை பற்றி அகன்று நீண்டு கிடக்கும் வானத்தை பற்றி, ஓயாது சுழன்று கொண்டிருக்கும் பூமியைப் பற்றி, அந்த பூமி பொதிந்து நிற்கும் மலைகளைப் பற்றி ஆராயச் சொல்லி மனிதனின் அறிவுக் கண்களை அல்குர் ஆன் திறந்து விடுகின்றது.

                    (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன் இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
                                                                                                                         அல்குர் ஆன் 55:17


                   கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.
                                                                                                                          அல்குர் ஆன் 70:40

                   பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில உதித்து மறு இடத்தில மறைந்து விடும். ஒரு கிழக்கு, ஒரு மேற்கு தான் இருக்கும்.

                  பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

            பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர் ஆன் பேசுகிறது.

                 பூமி உருண்டையானது என்ற புதுக் கருத்தை, புரட்சிக் கருத்தை முதன் முதலில் புரிய வைத்தது உலகப் பொதுமறையான அல்குர் ஆன் தான்.

             மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
                                                                                                                        அல்குர் ஆன் 55:33
            பரந்த வானப் பெருவெளியில், பறைவகள் பறப்பதைக் கண்டு மட்டுமே பழக்கப்பட்ட மனித சமுதாயத்தை பார்த்து, ' இந்த ஆகாய வெளியில் பலம் கொண்ட காலங்கள் மூலம் பறந்து செல்லுங்கள்' என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பறை சாற்றியது இந்தக் திருக்குர் ஆன்.


                 இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. 
                                                                                                                        அல்குர் ஆன் 55:19,20

                 கடல் ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத அன்றைய மக்களிடம் திருக்குர் ஆன் கூறிய இந்த வார்த்தைகள் இன்றைய காலத்துக் கண்டுபிடிப்பானது. 

                 இந்த வசனங்களிலிருந்து நாம் கிடைக்கப் பெரும் உண்மை, அறிவியலுக்கு திருக்குர் ஆன் தடை போடவில்லை என்பதே! மாறாக அறிவு ஆராய்ச்சிக்கு ஆர்வத் தீயை மூட்டி அதன் ஒளி வெள்ளத்தை உலகம் முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. 

                அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆர்வமூட்டும் வசனங்கள் அல்குர் ஆன் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. தலைப்பிற்காக இங்கு ஓரிரு வசனங்களை மட்டும் சுட்டிக் காட்டுகின்றோம். 




மிஹ்ராஜ் வழிபாடு

«øÄ¡‹Å¢ý ¾¢Õô¦ÀÂáø...
Á¢·Ã¡ˆ - ¦¾¡Ø¨¸ ¿À¢ ÅƢ¡?
Á¢·Ã¡ˆ þÃÅ¢ý §À¡Ð º¢ÈôÒ ¦¾¡Ø¨¸, ¾¢ìÕ, §¿¡ýÒ §À¡ýÈ Å½ì¸í¸û ¦ºöÅÐ ¿À¢(…ø) «Å÷¸Ç¢ý ÅÆ¢Ó¨ÈìÌ Á¡üÈÁ¡ÉÐ. Á¢·Ã¡ˆ þÃ× º¢ÈôÒ Å½ì¸í¸¨Ç ¿À¢(…ø) «Å÷¸û ¦ºö¾¾¡¸§Å¡, ¦ºöÂî ¦º¡ýɾ¡¸§Å¡ ¬¾¡Ãôâ÷ÅÁ¡É †¾¢Š¸û þĨÄ.
¿À¢(…ø) «Å÷¸û ÜȢɡ÷¸û:
¿ÁÐ Á¡÷ì¸ò¾¢ø þøÄ¡¾¨¾ «¾¢ø ±Åý ÒШÁ¨Â ÒÌòи¢ýÈ¡§É¡ «¨Å ¿¢Ã¡¸¡¢ì¸ôÀÎõ.( Ò†¡¡¢)
´ù¦Å¡Õ ÒШÁô ÀÆì¸Óõ ÅÆ¢§¸Î¾¡ý. ÅÆ¢§¸Î¸û «¨ÉòÐõ ¿Ã¸ò¾¢üÌ ¯¡¢Â¨Å¾¡ý.( ¿…¢)
±É§Å ¿À¢(…ø) «Å÷¸Ç¢ý ÅƢӨȨ ÁðÎõ À¢ýÀüÈ¢ ÁÚ¨Á¢ø ¦ÅüÈ¢ ¦Àڧšõ.( þý„¡ «øÄ¡‹)

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )