Dec 27, 2013

குலா என்றால் என்ன? தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும். கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (5273)
மேற்கண்ட செய்தியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண் வீட்டு விருந்து கூடுமா





இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தில் ஒரே ஒரு விருந்து முறையை மட்டுமே இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அது திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்தாகும். இதைத் தவிர வேறு விருந்தை திருமணத்தில் இஸ்லாம் காட்டித் தரவில்லை.



ஆனால் இன்றைக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய வலீமாவைப் போன்று பெண் வீட்டு விருந்து என்பது திருமணத்தில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இது இல்லாமல் திருமணம் இல்லை என்கின்ற அளவிற்கு சில ஊர்களில் எழுதப்படாத சட்டமாகவே இது சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எந்த அளவிற்கென்றால் பெண் வீட்டாருக்கும் சேர்த்து நாங்கள் விருந்தளிக்கின்றோம் என மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொண்டால் கூட பெண் வீட்டார் இந்த விருந்தைக் கைவிடுவதில்லை. நடத்தியே தீர வேண்டும் என்று நினைக்கின்றனர்.



ஏனென்றால் பெண் வீட்டார் விருந்து போடா விட்டால் அது தனக்கும் தனது குடும்பத்துக்கும் கேவலம் என்று பெண் வீட்டார் கருதுகின்றனர். பெண் வீட்டார் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து திருமண விருந்து கொடுக்காவிட்டால் அவர்களைக் கஞ்சர்களாகவும் கேவலமாகவும் சமுதாயம் பார்ப்பதே இதற்குக் காரணம். எனவே தான் சக்தி உள்ளவர்களும் சக்தி இல்லாதவர்களும் இந்த விருந்தை எப்பாடுபட்டாவது நடத்தி வருகின்றனர்.

எவை எல்லாம் வரதச்சணையாகக் கருதப்படும்?


வரதட்சணைன் என்று நேரடியாகச் சொல்லித் தந்தால தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர். சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான். 
பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

6979அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா ?




ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. 



ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர். 



الزَّانِي لَا يَنكِحُ إلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ(3)24



விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.



அல்குர்ஆன் (24 : 3)



ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர். 



ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம். 



ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும். 



விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது. 



அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது. 



இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது. 



பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது. 

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

அடிப்படை விளக்கம்
அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும்   கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.

அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின்   தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.

படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக்   கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள   குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.
அல்லாஹ் தன்னைப்பற்றி அல்குர்ஆனில் கூறியிருக்கும் வசனத்திற்கேற்ப அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
    لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ    وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ  

….. அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை அவன் (யாவற்றையும்)   செவியுறுபவனாகவும்) உற்று நோகியவனாகவும் இருக்கிறான். (ஸுரா அஷ்ஷுறா 42:11)
இதன் அடிப்படையில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறியிருக்கும் எந்த தன்மைகளையும் அவை அவனுக்கு இல்லை என்று மறுக்கக் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களை மாற்றக் கூடாது. அவைகளை புரட்டி, திருத்தி மாற்றுப் பொருள் கூறவும் கூடாது. அல்லாஹ்வின் வசனங்களிலும் அவனது அழகிய திருப்பெயர்களிலும் முரண்பட்ட பொருளை புகுத்தக்கூடாது. எந்நிலையிலும் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு படைப்பினங்களின் தன்மைகளை உவமையாக கூறக் கூடாது.

நிச்சயமாக அல்லாஹ்விற்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு சமமானவரும் எவரும் இல்லை. அவனுடைய தன்மையைப் பெற்றவரும் எவருமில்லை. அல்லாஹ்வை அவனது படைப்பினங்களைக் கொண்டு கணித்துவிடக் கூடாது. கணித்துவிடவும் முடியாது. அல்லாஹ் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மிக அறிந்தவன். அவன்தான் முற்றிலும் உண்மையை உரைப்பவன். அவனது படைப்பினங்கள் அனைத்தையும் விட அவன்தான் மிக அழகிய முறையில் பேசுபவன். ஆகவே அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் சரியானைவையும், உண்மையானவையுமாகும். அவன் தன்னைப் பற்றி கூறியிருக்கும் தன்மைகளுடன்தான் நாம் அவனை ஈமான் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அவனது தூதர்கள் அனைவரையும் உண்மையாளர்கள் என்றும் அல்லாஹ்வால் மெய்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் நம்பிக்கைக் கொள்ளவேண்டும். ஆகவே இறைத்தூதர்கள் அல்லாஹ்வைப் பற்றி கூறியுள்ள அழகிய தன்மைகள் அனைத்தும் அவனுக்கு உரியனவே என ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ்வைப் பற்றி உறுதியான ஆதாரமும், தெளிவான அறிவுமின்றி பேசுபவர்களின் வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது. இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.

இவ்வசனங்களிலிருந்து நாம் விளங்க வேண்டியவை என்னவெனில்:

Dec 17, 2013

இறைநம்பிக்கையின் பலம்


Photo: இறைநம்பிக்கையின் பலம் 

நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே இறைவனாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.
இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது. 

எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.

இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த ஃபிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா அலைஹிஸ்ஸலாம் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது. 

ஃபிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.
வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள். 

‘மூஸாவை வென்றுவிட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமல்லவா?’ என்று கேட்டார்கள். தங்கள் சூனியத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்தது. ஃபிர்அவ்னும் வாக்குறுதியை கொடுத்தான். ‘நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்’ என்றான். இதை விட வேறு என்ன வேண்டும்? ஆட்சியை கையில் வைத்திருப்பவனுக்கு நெருக்கமாகி விட்டால் விரும்பியது எல்லாம் கிடைக்குமே. அதிகாரத்தை பயன்படுத்தி நாமும் சிறிது ஆட்டம் போடலாமே! இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்தால் அந்த சூனியக்காரர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ஃபிர்அவ்னின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகத்தில் போட்டியில் குதித்தனர். தங்களின் தடிகளை எறிந்து மக்களின் கண்களை மயக்கி மகத்தான சூனியத்தை செய்தனர். வெற்றியின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக அவர்கள் உணர்ந்த போது, அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தடியை எறியுமாறு அறிவித்தான். எறிந்தவுடன் அது பெரிய பாம்பாகி அவர்களின் கற்பனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டது. சூனியக்கலையில் ஜாம்பவான்களாக இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தங்களின் சூனியங்கள் வீணாகி விட்டதை உணர்ந்த அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தாங்கள் சிறுமைபடுத்தப்பட்டதையும் உணர்ந்தனர்.

தோல்வியை கண்டவர்கள் அத்துடன் நிற்கவில்லை. இத்தனை காலம் தாங்கள் செய்து வந்த சூனியங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதையும் உணர்ந்தனர். மூஸா என்ற சாதாரண மனிதரால் இதனை செய்திருக்க முடியாது. அவருக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தார்கள். தங்களின் சக்திகளுக்கெல்லாம் மேலான சக்தி பெற்றவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதையும் அறிந்தனர்.

தங்களின் சூனியத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஃபிர்அவ்னை விட அல்லாஹ்தான் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டனர். உணர்ந்தவர்கள் உடனே உரக்க உரைத்தனர், ‘அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவன் ஆவான்’ அதுவரை நிராகரிப்பின் பக்கம் இருந்தவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை கண்டவுடன் சரண் அடைந்தனர்.

தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூனியக்காரர்கள் மூஸாவின் பக்கம் சென்றதை பிர்அவ்ன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்னரே நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? இது மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சி என்று கூறினான். எஞ்சியிருக்கும் மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த ஃபிர்அவ்ன் அராஜகத்தின் பக்கம் திரும்பினான்.

புதிதாக நம்பிக்கை கொண்ட அந்த மக்களை நோக்கி ‘உங்கள் அனைவரையும் மாறு கை மாறு கால் வாங்கி சிலுவையில் அறைவேன்’ என்று பயமுறுத்தினான். இப்போது தானே நம்பிக்கை கொண்டார்கள், சிறிது பயம் காட்டினால் மீண்டும் நம் பக்கம் திரும்பி விடுவார்கள் என்று நினைத்தான் போலும்.

ஆனால் அந்த மக்களோ மிகவும் உறுதியாக இருந்தார்கள். ‘நாங்கள் எங்கள் இரட்சகனின் பக்கமே திரும்ப செல்வோம். அவனது அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நீ எங்களை பழி வாங்குகிறாய்’ என்ற தெளிவாக கூறினார்கள். தங்களின் நம்பிக்கையில் தாங்கள் உறுதியாக இருக்க இறைவனிடம் ஒரு பிரார்த்தனையும் செய்தார்கள். ‘எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றி கொள்வாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

மூஸாவை தோற்கடிக்க வேண்டும், பிர்அவ்னுக்கு நெருக்கமானவர்களாக ஆக வேண்டும் என்று விரும்பிய மக்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து அவனை நம்பிக்கை கொண்ட பிறகு அப்படியே மாறிவிட்டார்கள். ஃபிர்அவ்னின் நெருக்கத்தை விட அல்லாஹ்வின் நெருக்கத்தை தேர்ந்தெடுத்தார்கள். ஃபிர்அவ்னிடம் கொள்ளும் நெருக்கமானது சில காலம் மட்டுமே நிலைத்திருக்கும், ஆனால் அல்லாஹ்வின் நெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்தார்கள்.

அல்லாஹ்வின் நம்பிக்கை மனதில் வந்த பிறகு வேறு எந்த சக்திக்கும் அவர்கள் அடிபணிபவர்களாக இல்லை. ஃபிர்அவ்னின் குணத்தையும் அவனது கொடூரத்தையும் நேரடியாக கண்டவர்கள். அதிகார மமதையில் எதை வேண்டுமென்றாலும் செய்வான் என்பதையும் அறிந்தே வைத்திருந்தார்கள். அதுவரை அவன் முன் குனிந்து நின்றவர்கள், இறைநம்பிக்கை வந்தவுடன் அவனுக்கெதிராக உறுதியாக நின்றார்கள். தங்களின் நம்பிக்கையும் உறுதியும் தங்களின் உயிரை பறிக்கும் என்பதை அறிந்த பிறகும் அதற்கு அவர்கள் கவலைபடவில்லை.

ஃபிர்அவ்ன் கொடுக்கும் தண்டனை சில நிமிடங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிந்து விடும். ஆனால் பிர்அவ்னுக்கு கட்டுப்பட்டால் நிலையான மறுமையில் நிரந்தரமான வேதனையை அனுபவிக்க வேண்டுமே என்ற பயம் அவர்கள் மனதில் இருந்தது. நிலையற்ற உலகத்தை விட நிலையான மறுமையை தேர்ந்தெடுத்தார்கள். எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அல்லாஹ்வின் உதவியின்றி எதையும் செய்ய முடியாது. எனவேதான் தங்களுக்கு உறுதியை வழங்குமாறு பிரார்த்தனையும் செய்தார்கள்.

இதுதான் சூனியக்காரர்களாக வந்து இறை நம்பிக்கையாளர்களாக மாறியவர்களின் சம்பவம். இறைநம்பிக்கை மனதிற்கு சென்றால் என்னவெல்லாம் செய்யும் என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது. நமது இறை நம்பிக்கையை சற்று உரசிப் பார்ப்போமா?

சிந்நதனைக்கு

-ஏர்வை ரியாஸ்


நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே இறைவனாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.

இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது.

எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.

இன்று நாமும் இறைநம்பிக்கை கொண்டுள்ளோம். நம்மில் பலருக்கு இந்த இறைநம்பிக்கை என்னும் பரிசு மிகவும் எளிதாக கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. எளிதாக கிடைத்ததால் தான் என்னவோ நாம் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்! இதனால்தான் நமக்கு பல படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

குர்ஆனிலும் சான்றோர்களின் வாழ்க்கையிலும் இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் குர்ஆனின் ஒரு சம்பவம் இறை நம்பிக்கையின் பலம், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் செய்தியை பெற்றுக் கொண்டு அதனை அப்போதைய அரசனாக இருந்த ஃபிர்அவ்னிடம் கொண்டு செல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மொத்தமாக வைத்து அனுபவித்து கொண்டிருப்பவனுக்கு அல்லாஹ் மட்டும்தான் கடவுள் என்பதை ஜீரனிக்க முடியவில்லை. ‘நீர் கொண்டு வந்திருக்கும் அத்தாட்சி எதையும் காட்டும்’ என்று முதலில் கேட்டான். மூஸா அலைஹிஸ்ஸலாம் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது பெரிய பாம்பாகிவிட்டது. தனது கையை சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.

ஃபிர்அவ்னின் மனது உண்மையை ஏற்க மறுத்தது. அவனது துதிபாடிகளும் ‘இவர் ஒரு திறமையான சூனியக்காரர்’ என்று கூறினர். ‘இவரை எவ்வாறு எதிர்கொள்வது?’ என்று தனது சகாக்களுடன் ஆலோசணை செய்தான். ‘நமது நாட்டின் திறமையான சூனியக்காரர்கள் அனைவருக்கும் அறிவிப்பு கொடு. அவர்கள் இவருடன் போட்டியிட்டும்’ என்று கூறினர் சகாக்கள்.
வந்த சூனியக்காரர்கள் போட்டி ஆரம்பம் ஆவதுற்கு முன் தெளிவாக ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டார்கள். 

Dec 10, 2013

மறுமை வாழ்வு, ஒரு தெளிவு!

ஆராய்ச்சி பகுத்தாய்வின் அடிப்படையில் கிடைக்கப்படும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. இறப்பிற்குப்பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும் பகுத்தாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால் இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு எனும் கோட்பாடு நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமான ஒன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், இறப்பிற்குப்பின்  ஒரு வாழ்வு உண்டு என்று நம்பிக்கை கொள்ளும்படி போதித்தார்கள்.

மறுமை வாழ்வின் மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழி வகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையும் பொருளற்றதாகி விடும் எனும் அளவுக்கு இறைத்தூதர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வைப்பற்றி அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய  பாங்கு ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இறை வெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து இறைத்தூதர்களும் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் இறப்பிற்குப்பின் உள்ள வாழ்வை மக்கள் மறந்ததுதான். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால் அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையில் ஏராளமான நல்லறத் தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக்கொள்கைகள், குலப் பழக்க வழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இவைகளிலிருந்து மாருபட்டதோடல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியாளர்களுக்கு அளித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது.

தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமை படுத்தியது எது? அவர்கள் தமது இதயத்தையும், அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தை புலனறிவின் மூலமாக உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும்போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலன்களால் உணர முடியாத விஷயங்களை, நிலைமைகளை புரிந்துகொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.

Dec 3, 2013

பெண்களைப்பெற்ற முஸ்லீம்களே! காவிகள் வலைவிரிக்கின்றார்கள்!! உஷார்,உஷார்,உஷார்,உஷார்!!!




பெண்களைப்பெற்ற முஸ்லீம்களே! காவிகள் வலைவிரிக்கின்றார்கள்!!




உஷார்,உஷார்,உஷார்,உஷார்!!!


நாகர்கோவிலைச்சேர்ந்த இஸ்லாமியப்பெண் சிவகாசியில் ஒரு பள்ளியில்ஆசிரியராக பணிசெய்கிறது அதேபள்ளியில் நிர்வாகத்துறையில் உள்ள ஒருவரின் காதல் வலையில் விழுந்துள்ளார் இதுபெற்றோருக்கு தெரிந்ததும் அந்தப்பெண்ணை கண்டித்து தம்மோடு அழைத்துவந்துவிட்டனர் இந்நிலையில் அந்த இளைஞர் மதுரை உயரநீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வுமனு தாக்கள் செய்துள்ளார் இதுவிஷயமாக பெண்னண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தசொன்னது உயர்நீதிமன்றம் இன்று இவ்வழக்கு விசாரனைக்கு வந்திருப்பதாக பெண்ணின் குடும்பத்தார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சீனி சுல்தான் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்டதலைவர் வழக்கறிஞர் பயாஸ் ஆகியோர் என்னை தொடர்புகொண்டு அந்தபெண்ணை ஆஜர்படுத்த அவர்கள் பெற்ரோருடன் தாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் பையன் தரப்பில் ஏராளமானோர் நீதிமன்றத்திற்க்கு உள்ளேயும்,வெளியில் நிறைய வாகனங்களோடு நிற்கிறார்கள் பெண் தன்குடும்பத்தாரோடுதான் செல்வேன் என்று சொல்கிறார் ஆனால் எதிர்தரப்பில் வந்தவர்கள் எதற்கும் தயாராகவந்ததுபோல் தெரிகிறது என்று கூறினார்கள்.

உடனே நானும் inlpartyநிர்வாகிகளும்,எனது நன்பர்களுடன் நீதிமன்றத்திற்க்கு சென்றோம் அங்கு அவர்கள் சொன்னதுபோல் எதிர்தரப்பினர் பெண்ணை அழைத்துவரும்போது எப்படியாவது கெஞ்சியோ,மிரட்டியோ நீதிமன்றத்தில் தம்மோடுவர அந்தபெண்ணை நிர்பந்தப்படுத்துவதுபோல் நின்றிருந்தனர் நாங்கள் முன்பே நீதிபதியிடம் அந்தப்பெண் என்ன சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தோம் ஆனால் அந்தப்பெண் நாங்கள் சொல்வதை அவ்வளவாக கவனமாக கேட்கவில்லை ஏர்கனவே அந்தபெண் எப்படி நடக்கவேண்டும் என்று யாராலோ பயிற்சி கொடுக்கப்பட்டவள்போல் தெரிந்தது அந்தப்பெண்ணையும்,அந்தப்பையணையும் நீதிபதிகள் அழைத்தனர் நீதிபதிகள் இருவரும் பெண்பிள்ளையைபெற்றவர்கள்போல் மிகவும் சமயேசித்தமாக அந்தப்பெண்ணிடம் கேள்விகேட்டு அந்தப்பெண்ணை குடும்பத்தாருடன் அனுப்பிவைத்தனர்.

Dec 2, 2013

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!




"இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு, உடை

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, "நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)
நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல்

நபித்தோழர்கள் வாழ்வினிலே மறப்போம்! மன்னிப்போம்!

  1. Photo: நபித்தோழர்கள் வாழ்வினிலே

மறப்போம்! மன்னிப்போம்!

 

நான் நபி (ஸல்) அவர்கடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ர) அவர்கள் தமது முழங்கால் வெயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன் னார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, அல்லாஹ் வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்கடம் வந்தேன் என்று சொன்னார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ர) அவர்கள் (அபூபக்ர் -ர- அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ர) அவர்கன் வீட்டிற்குச் சென்று, அங்கே அபூபக்ர் (ர) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க, வீட்டார் இல்லை என்று பதிலத்தார்கள்.

ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ர) அவர்கள் பயந்து போய் தம் முழங்கால்கன் மீது மண்டியிட்டு அமர்ந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்  என்று இருமுறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், (மக்களே!) அல்லாஹ் என்னை உங்கடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா? என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ர) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

நூல்: புகாரி 3661

இருவருக்கு மத்தியில் சண்டை ஏற்படும் போது அது ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் நாளடைவில் பெரும் பூகம்பமாக ஏற்பட்டு இருவருக்குமிடையில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்மிடம் விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருப்பதில்லை; தவறை மன்னிக்கும் மனப் பக்குவமும் வருவதில்லை.

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் சண்டை வந்தது. இதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தவறிழைத்துள்ளார்கள். எனவே தவறுக்காக உமர் (ரலி) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த உமர் (ரலி) அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டார்கள். இதனால் மன வேதனை அடைந்த அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகளாரிடம் சென்று விவரத்தைத் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் கோபம் தணிந்த உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் மன்னிப்புக் கேட்டும் மன்னிக்கத் தவறியது மாபெரும் தவறு என்பதை உணர்ந்து அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்திக்க வீட்டிற்குச் சென்ற போது அவர்களைக் காணாததால் நபிகளாரின் அவைக்குச் சென்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கண்ட நபிகளாருக்கு கோபம் ஏற்பட்டது. இஸ்லாத்திற்காக பெரும் தியாகத்தைச் செய்த அபூபக்ரையே மன்னிக்க மறுப்பதா? என்று கோபப்பட்டார்கள். அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் மீது கோபப்படாதீர்கள் என்று நபிகளாரை சமாதானப்படுத்தினார்கள்.

மன்னிக்க மறுத்த உமர் (ரலி) அவர்கள் மீது நன்றாக கோபப்படட்டும், நன்றாகத் திட்டட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் நற்பண்புகளை அதிகம் கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நான் தான் தவறு செய்தேன் என்று கூறி, உமர் (ரலி) அவர்கள் மீது நபிகளாருக்கு இருந்த கோபத்தைத் தணித்தார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது அளவு கடந்த அன்பை உமர் (ரலி) கொண்டிருந்தார்கள். நபிகளாருக்குப் பிறகு யாரை தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வரும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முதலில் உமரை முன் மொழிந்தார்கள். ஆனால் நபிகளாருக்குப் பிறகு மிகச் சிறந்தவர் அபூபக்ர் (ரலி) அவர்களே என்று கூறி முதன் முதலில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் உமர் (ரலி) அவர்கள் தான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், நீங்கள் உமர் பின் கத்தாப், அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ர) அவர்கள், இல்லை; நாங்கள் உங்கடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்கல் சிறந்தவர்; எங்கடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்  என்று சொல்விட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்கடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ர) அவர்கடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

நூல்: புகாரி 3668

மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கும் மனப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன் பெருந்தன்மையால் தவறு செய்பவர்களைத் திருத்த வேண்டும். இருவருக்கும் மத்தியில் மனக் கசப்புகளை உருவாக்காமல் அதை நீக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். ஆனால் இன்று ஒருவர் ஸலாம் கூறினால், அவர் தமக்குப் பிடிக்காதவராக இருந்தால் அந்த ஸலாத்திற்குக் கூட பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுபவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் நடந்து கொண்ட முறையை எண்ணிப் பார்க்கட்டும். மேலும் பின்வரும் நபிமொழியையும் சிந்திக்கட்டும்.

நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (93)

Source: பிப்ரவரி 2008 தீன்குலப் பெண்மணி 

Visit : www.ilayangudithakwatrust.blogspot.com
நான் நபி (ஸல்) அவர்கடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ர) அவர்கள் தமது முழங்கால் வெயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன் னார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, அல்லாஹ் வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்கடம் வந்தேன் என்று சொன்னார்கள்.
உடனே, நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ர) அவர்கள் (அபூபக்ர் -ர- அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ர) அவர்கன் வீட்டிற்குச் சென்று, அங்கே அபூபக்ர் (ர) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க, வீட்டார் இல்லை என்று பதிலத்தார்கள்.
ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ர) அவர்கள் பயந்து போய் தம் முழங்கால்கன் மீது மண்டியிட்டு அமர்ந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன் என்று இருமுறை கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், (மக்களே!) அல்லாஹ் என்னை உங்கடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா? என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ர) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: புகாரி 3661
இருவருக்கு மத்தியில் சண்டை ஏற்படும் போது அது ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் நாளடைவில் பெரும் பூகம்பமாக ஏற்பட்டு இருவருக்குமிடையில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்மிடம் விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருப்பதில்லை; தவறை மன்னிக்கும் மனப் பக்குவமும் வருவதில்லை.

கூட்டு துஆ

தன்னை விட சக்தி படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை மனிதன் ஒப்புக் கொண்டுள்ளான் என்பதற்கு பிரார்த்தனை சிறந்த எடுத்துக்காட்டு!
தான் பலவீனமானவன் என்பதையும், இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

"பிரார்த்தனை தான் வணக்கமாகும். (ஏனெனில்) உங்கள் இறைவன் கூறுகின்றான்: என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி),
நூற்கள் : அபூதாவூத் (1264), திர்மிதீ (2895, 3170, 3294), இப்னுமாஜா (3818), அஹ்மத் (17629)

வணக்கமாகக் கருதப்படும் பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு வழிகாட்டுகின்றன.

பிரார்த்தனை செய்பவரிடம் முக்கியமாக பின்வரும் காரியங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று குர்ஆனும் நபிமொழிகளும் நமக்குக் கட்டளையிடுகின்றன.

Nov 20, 2013

இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமை நமக்கு இருக்கிறது


[ ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.]

இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை... 

இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது. பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.

வெற்றி வேண்டுமானால் ஒன்றுபடுங்கள்!


"இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்"
இஸ்லாம் ஒருமைத்துவத்தையும், அமைதியையும் இதர வாழ்க்கை சம்மந்தமான அனைத்து இன்னோரன்ன சமூக ஒருமையையும் விரும்புகின்றது, காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்ல உலக முஸ்லிம்களின் ஒருமைப்படும் வெற்றியும் நாம் ஒவ்வொரு தனி நபரின் மூலம்தான் ஒரு குழுவாக மாறும்.

மனிதனின் சிந்தனையின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றது, மனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னுடைய சிந்தனையை ஓட்டிட வேண்டும்? இறைவன் விசாலமான நேர்வழியை காட்டித் தந்திருக்கும்போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு சண்டையிட்டு மடிய வேண்டும்?
மனிதர்கள் பிரிந்து கிடக்கின்ற, பிளவுபட்டுக் கிடக்கின்ற சூழ்நிலைகளை நாம் ஆழ்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். உலக இலாப-நாட்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும். பலமும் வளமும் ஒற்றுமையில்தான் இருக்கிறது.

“....இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்....’’ (அல்குர்ஆன்- 22:78)

நம்மில் முஸ்லிம் என்ற ஒருமையும், இஸ்லாம் என்ற கொள்கையும்தான் இருக்க வேண்டும், முஸ்லிம்கள்தங்களுக்குள் துணை நிற்பதில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு உவமையாக,

Nov 15, 2013

‘களா’ தொழுகை

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.
தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.
கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.
“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.
“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

Nov 13, 2013

ஆசூரா நோன்பு


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

      ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592 

     இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். 
நூல்: முஸ்லிம் 1901 

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?

பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்?



இவ்வாழ்கை என்ற பரீட்சையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான வாய்ப்புகளும் சோதனைகளும் இறைவனால் வழங்கப்படுகின்றன. நமக்கு வாய்த்த சூழ்நிலையில் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் எதிர்கொண்டால் நமக்கு பரீட்சையில் வெற்றி! அவனுக்கு பொருத்தமற்ற அல்லது அவன் தடுத்த முறையில் அதை எதிர்கொண்டால் அதுவே தோல்வியில் முடிகிறது!

நமது வாழ்கை பரீட்சையின் ஒரு இன்றியமையாத அங்கமாக நம்மோடு வருபவர்கள் பெண்கள். குழந்தைகளாக அவர்கள் நமக்கு வழங்கப் பட்டால்....! இன்று பலரும் நிம்மதி இழப்பது அதனால் தான் என்பதை கண்டு வருகிறோம்! வரதட்சனைக் கொடுமை, அவர்களை வளர்ப்பதிலுள்ள சிக்கல்கள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட பிரட்சனைகள்...... என பலவற்றையும் கருதி 'எதற்கு வம்பு?' என்று கருவில்  இருக்கும் போதே பெண்குழந்தைகளை கொன்று வருவதையும்,ஸஸ மீறி பிறந்துவிட்டால் குப்பைத் தொட்டியிலோ அரசு தொட்டிலிலோ அவர்களை எறிந்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

ஆனால் தூய இறைவன் தன்னை நம்புவோருக்கு  இப்பிரட்சினைகளை  அழகான முறையில் அணுக தன் திருமறை மூலமும் தன் திருத்தூதர் மூலமும் வழிகாட்டுகிறான். அடிப்படையாக சில உண்மைகளைப் புரிய வைப்பதன் மூலம் நமது மனதை வீண் சஞ்சலங்களிளிருந்தும் அதன் மூலம் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்தும் காத்தருள்கிறான்.:

1. சோதனையாக வழங்கப் படுபவையே குழந்தைகள்:

'நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன¢ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 8:28)

2.  ஆணும் பெண்ணும் அவன் தீர்மானிப்பதே. அதற்காக உங்களுக்குள் சண்டை வேண்டாம்

Nov 7, 2013

பரிகசிக்கப்படும் தாடி!


Post image for பரிகசிக்கப்படும் தாடி!

முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.
மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர்.
“மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம்
இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான் உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.
“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.
கோதுமை உணவைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்களும் கோதுமை உண்ணுங்கள்!” என்று நமக்குத் கட்டளையிடவில்லை. ஆனால் தாடியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அது பற்றிய ஹதீஸ்களை முதலில் நாம் பார்ப்போம்.
“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )