Aug 25, 2014

பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்

 
                ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தினான்.
 
                நடுநடுங்க வைக்கும் நரக வேதனையை பற்றி நாளெல்லாம் நமது அறிஞர்களின் பயான்களிலிருந்து கேட்டிருந்தாலும் கவனக்குறைவாக வாழ்வதே நமது நிலையாக கொண்டிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் அழித்துவிடுமளவு பாவம் செய்த என் அடியார்களே! உங்கள் கடந்த கால பாவங்களை விட்டும் உங்களை மன்னிக்கிறேன் என்று இறைவன் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறான். ஆனாலும் அந்த அழைப்பை அலட்சியம் செய்துவிடுகிறோம். இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. எனவே தமது பாவங்களை போக்கும் நல்லறங்களை கண்டறிந்து மறுமை வெற்றிக்கு வழி காண்போம்.
 
திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நமது பாவங்களை அழிக்கும அழகிய நல்லறங்களை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அந்த நல்லறங்களை செய்து மறுமை வெற்றிக்கு வித்திடுவோம்.
திக்ர் செய்தல்
 
அல்ஹ்வுக்கு மிகவும் பிரியான இரண்டு எளிமையான வாசகங்கள். அவை நன்மை தராசில் கனமானவையாகவும். பாவங்களை அழிப்பவையாகவும் இருக்கும்.
 
6406 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ
اللَّهِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ رواه البخاري
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 

திருமணம்

குறிப்பிட்ட பருவத்தை அடைந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் திருமணத்தை செய்து விட வேண்டும், அதுவே அவர்களை மார்க்கத்திற்கு முரணான காரியங்களை விட்டும் தடுக்கும் கேடயமாக திகழும் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்  ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கüடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் "இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் யஸீத்,
நூல் : புகாரி 5066
திருமணம் என்பது தீமைகளிலிருந்து காக்கும் ஓர் பாதுகாப்பு கருவி என நபியவர்கள் கூறியுள்ளதை காணலாம்.

திருமணம் ஓர் மன அமைதி

பல்வேறு காரணங்களால் நிம்மதியை இழந்து, மனஅமைதியை தொலைத்து தவிக்கும் ஆண்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக, இழந்த மன அமைதியை திரும்ப பெறுவதற்காக திருமணமே மிகச் சிறந்த வழி என இறைவன் கூறுகிறான்.
 "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 7:189
ஒருவரின் கட்டுப்பாடான, நிம்மதியான வாழ்க்கைக்கு திருமணம் வழிவகுக்கும் என இறைவனும் இறைத்ததூதரும் உத்தரவாதம் அளித்துள்ளதை இதிலிருந்து அறிகிறோம்.
திருமணத்தின் மூலம் என்ன பயன் ஏற்படும் என்று இறைவனும் இறைத்தூதரும் உத்தரவாதம் அளித்துள்ளார்களோ அது நடைமுறையில் இல்லை என பலர் புலம்புவதை காணமுடிகிறது.
உண்மை தான். இன்றைக்கு பலர் என்றைக்கு நான் திருமணம் செய்த அன்றே எனது நிம்மதி பறிபோய் விட்டது என புலம்பித் தவிக்கிறார்கள்.
இவர்களுக்கு இறைவன் வாக்களித்த நிம்மதி திருமணத்தின் மூலம் ஏற்படவில்லையே?
இன்னும் பலர் திருமணம் செய்த பிறகும் அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு திருமணம் தீமைகளிலிருந்து காக்கும் அரணாக இல்லையே? ஏன்?

உத்தரவின்றி உள்ளே செல்லாதீர்!

 
இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் நடைமுறை வாழ்க்கைத் திட்டமாகும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய மனிதப் பண்பை கற்றுத் தருகின்றது. அதில் ஒன்று தான், ஒருவர் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும் போது அவர் பேண வேண்டிய பண்பும், வீட்டில் உள்ளவர் தன் வீட்டிற்கு வருபவருக்கு அனுமதியளிக்கும் பண்புமாகும்.
இன்று யாரேனும் ஒரு வீட்டிற்குச் சென்றால் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறாமலேயே உள்ளே நுழைகின்ற அநாகரிகமான நடைமுறையைப் பார்க்கின்றோம். திறந்து கிடக்கும் வீட்டில் மட்டுமல்ல! திரை தொங்கும் வீட்டிலும் திரையை நீக்கிக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றார்கள். இதிலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், பெண்கள் தாங்கள் வழக்கமாக அணியும் ஆடைகளைக் களைந்து விட்டு, படுக்கை ஆடைகளுடன் படுக்கைக்கு ஒதுங்கும் வேளைகளில் கூட அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.
 
ஓர் இறை நம்பிக்கையாளர் அடுத்தவர் வீட்டுக்குச் செல்லும் போது அடுக்கடுக்கான ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது. அதை ஒருவர் அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டும்.
அவை வருமாறு:
 
அனுமதி கோரல்
 
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)
 
அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள். அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.
 
கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)
 
இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். நான் வாசல் தேடி வந்தேன். உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நின்றவாரே அனுப்பி விட்டார் என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றி குறை கூறிப் பொறுமுவார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கும், பொல்லாப்புக்கும் அவர் இடமளிக்க மாட்டார்.
 
தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்
 
வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டு தன் பெயரைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக நான் தான் என்று கூறக் கூடாது.
 
என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், "யாரது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "நான் தான்'' என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நான் தான் என்றால்...?'' என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6250)
 
மூன்று முக்கிய நேரங்கள்
 
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
 
 
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57,58)
இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்களைப்பற்றி சொல்லவா வேண்டும்?!

Aug 13, 2014

அல் குர் ஆனின் வழியில் அறிவியல்……நாமே பூமியை விரித்தோம்!

“இன்னும் பூமியை நாம் அதனை விரித்தோம்”-அல் குர்ஆன்.51:48
 
அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் இப்பூமியை விரித்ததாக குறிப்பிடுகிறான். ஆதியில் இப்பூமி படைக்கப்பட்டபோது இன்றிருப்பதுபோல் தனித் தனி கண்டங்களாக இல்லை.பெரும் ஒற்றை பாறைக் கோளமாகவே இருந்தது. இதனை “பாங்கியா’(Super Continent Pangaea) என்று அழைக்கின்றனர். பூமியின் நிலத்தட்டை அல்லாஹ் ஏன் விரிக்க  வேண்டும்? உயிர் ஜீவன்கள் வாழ்வதற்கு இவை அவசியம் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
 
Pangaea (sometimes spelled Pangea), the most recent of a series of supercontinents on Earth, formed about 270 million years ago and broke apart about 200 million years ago. At this time most of the dry land on Earth was joined into one huge landmass that covered nearly a third of the planet’s surface. The giant ocean that surrounded the continent is known as Panthalassa.

Artwork showing the Earth at the time Pangaea broke upநாம் அறிந்தபடி அடித்தட்டு பெயர்ச்சி (Tectonic Plate Movement) உயிரின பிறப்புகளுக்கு மிகவும் முக்கியமானது. பாறை கோள்களில் (Rocky Planets)  மனிதக் குடியேற்றம் பற்றி சொல்ல வந்தால், எண்ணிக்கையில் பேரளவு பெயர்ச்சிகள் நேர்வது பெரும் தேவை என்பது எங்கள் கணக்குப்படி தெரிய வருகிறது. சூரிய மண்டலத்தில் நமது பூமியே பெரும்பாறைக் கோள் என்பதும், உயிரினம் வாழ தகுதி உள்ள கோள் என்பதும் எதிர்பாராது நிகழ்ந்தவை அல்ல. மீள் சுற்று இயக்கங்கள் பாறைக்கோள்களில் உயிரினம் வசிக்க பெரும் பங்கு ஏற்கின்றன. அடித்தட்டுகள் நகர்வதாலும், பாறைகளுக்குள் அடைபட்ட ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்ற சிக்கலான இரசாயன வாயுக்கள் வெளியேறி, மீள் சுற்று நிகழ்ச்சியில் சூழ்வெளியில் தொடர்ந்து பயணிக்கின்றன. -Diana Valencia, Harvard University.
 

விபசாரத்தை விட்டு மக்களைப் பாதுகாக்கும் இஸ்லாம்

 
அன்று முதல் இன்று வரை உலகில் பல வடிவங்களில் விபசாரம் பல இடங்களிலும் சமூகத்தை சீரழித்து வருகின்றது. இத்தீய செயற்பாடு மனிதர்களின் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகின்றது. இதனால் குடும்பங்களில் பிரிவினைகள், கலாசார சீர்கேடுகள், நோய்கள், தந்தை யார் என அறிய முடியாத குழந்தைகளின் உருவாக்கம், அநாதை விடுதிகள் அதிகரிப்பு, கருக் கலைப்பு, குழந்தைக் கொலைகள் அதிகரிப்பு, விலை மாதர் விடுதிகள் அதிகரிப்பு, பேதைப் பெண்களின் தற்கொலைகள் அதிகரிப்பு என பல கோணங்களில் உலகில் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
 
பல தெய்வ மத நம்பிக்கையுடையவர்களிடம் உங்கள் மதங்களில் விபசாரம் செய்வது பாவம் எனச் சொல்லவில்லையா? எனக் கேட்பின் அவர்கள் சரியான பதிலைத் தருவதில்லை. அவர்கள், தமது மதங்களில் விபசாரம் செய்வது பாவம் எனக் கூறுகின்றனர். ஆனால் அதைத் தடுப்பதற்குப் பொருத்தமான தண்டனைகள் அவர்கள் தமது மதத்தில் இருப்பதாகக் கூறுவதில்லை. இதனால் அவ்வாறான சமூகங்களில் விபசாரம் சாதாரண நிகழ்வுகளாக நடை பெறுகின்றன. ஆனால் முன்னைய இறை நெறி நூல்களிலும் விபசாரத்திற்கான கடும் தண்டனைகள் இருந்தன. ஆனால் அவர்களின் குருமார்கள் அவற்றை மறைத்தே போதனை செய்து வந்ததுடன், அத் தண்டனைகளை நெறிநூல்களிலிருந்து மறைத்தும் விட்டனர். இதனால் அல்லாஹ் இறுதி இறைநெறியான அல்குர்ஆன் மூலம் விபசாரத்தைத் தடுப்பதற்கு பொருத்தமான சட்டங்களை இறக்கி வைத்தான். அல்குர்ஆன் விபசாரத்தை எவ்வாறு தடுக்கின்றது என்பதை அவதானியுங்கள்.
 
நீங்கள் விபசாரத்தை நெருங்காதீர்கள். நிச்சய மாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 17:32)
அல்லாஹ் அல்குர்ஆனில் விபசாரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம் என எச்சரிக்கிறான். அத்துடன் விபசாரம் ஒரு மானக்கேடான செயல் எனச் சுட்டிக் காட்டுகின்றான். நபி(ஸல்) அவர்கள் விபசாரத்தைப் பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.
 
விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. திருடன் திருடும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. மது அருந்துபவன் மது அருந்தும் போது, இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவ மன்னிப்புக் கோருதல் பின்னர் தான் ஏற்படுகிறது. (புகாரி : 6810)
ஒருவன் விபசாரம் புரிகின்ற போது இறை நம்பிக்கையாளனாக இருக்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேலும் கூறுவதைப் பாருங்கள்.
அல்லாஹ் தனது (அரியணையில்) நிழலே இல்லாத மறுமை நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்.

1. நீதிமிக்க ஆட்சியாளன்
2. இறை வணக்கத்திலேயே வாழ்ந்த இளைஞன்
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அவனது அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதர்.
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
5. இறைவழியில் நட்புக் கொண்ட இருவர்
6. அந்தஸ்த்தும் அழகும் உடைய ஒரு பெண் தன்னை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவன்.
7. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (புகாரி : 6806)
 
(இறைவனின் உண்மையான அடிமைகள்) விபசாரம் செய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன்:25:68)
நபி(ஸல்) அவர்கள் :
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )