Dec 29, 2014

கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்

 
பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருவதை உணருவார்கள். அந்த சக்தியைத்தான் ஆத்திகர்கள் கடவுள் அல்லது இறைவன் என்று போற்றி வணங்குகிறார்கள். அந்த கடவுளை சரிவர ஆராய்ந்து ஏற்றுக் கொள்பவர்களும் உள்ளனர். ஆராயாமல் முன்னோர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் நம்புவோரும் உள்ளனர். இரண்டாம் வகை நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. நாத்திகத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
 
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக, நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என் நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம் நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் - என்ற பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப் பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். இந்த இறையச்சம் மனிதர்களிடம் இல்லாமல் போவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.

வேதங்கள் கூறும் விண்வெளி பெருவெள்ளம்

Post image for வேதங்கள் கூறும் விண்வெளி பெருவெள்ளம்     


 
அடுத்ததாக விண்ணில் உள்ள வெஸ்டா (asteroid vesta) என்னும் குறுங்கோளில் இருந்து வந்து விழுந்த விண்கல் மாதிரியில், நீர் இருப்பதற்கான சான்றுகளை ஆராய்ந்தனர். இந்த குறுங்கோளானது பூமி தோன்றிய சம காலத்தில் உருவான ஒன்று. இரண்டு விண் கல்லிலும் ஒரே மாதிரியான நீர்மக்கூறுகள் உள்ள Carbonaceous chondrite இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக பூமி உருவாகும்போதே அதனுடன் தண்ணீரும் இருந்தது என்ற உண்மை அறியப்பட்டது. (“The planet formed as a wet planet with water on the surface.”)
A new study is helping to answer a longstanding question that has recently moved to the forefront of earth science: Did our planet make its own water through geologic processes, or did water come to us via icy comets from the far reaches of the solar system?
Artist’s concept showing the time sequence of water ice, starting in the sun’s parent molecular cloud, traveling through the stages of star formation, and eventually being incorporated into the planetary system itself.
 சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு  ஆதாரமான  ஜீவநீர் ஆதியில்

Dec 11, 2014

வானம் ஒரு பாதுகாப்பான விதானம்

Post image for வானம் ஒரு பாதுகாப்பான விதானம்

அளவற்ற அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

வானம் ஒரு பாதுகாப்பான விதானம்
Earth’s “plasmaspheric hiss” protects against a harmful radiation belt
எஸ்.ஹலரத்அலி. திருச்சி-7
மனித சமூதாயத்திற்கு நேர்வழி காட்ட இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன்,ஏராளமான வசனங்கள் மூலம் நமக்கு நேர்வழி காட்டுகிறது.அது இறக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி நாள் வரை பிறக்கும் மனிதர்களின்அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தவாறு சிந்தித்து செயல்படச் சொல்கிறது. அவ்வகையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனை சிந்திக்கச் சொல்லும் ஒரு வசனம்,

அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை!

"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்." (அல்குர்ஆன்-18:102)
 
மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் 'தர்கா' மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?அல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது 'ஷிர்க்' ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

அரவாணிகள் பற்றிய இஸ்லாமிய தீர்ப்பு என்ன?

ஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள்.
 
தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள்.
 
அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள்.
இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
 
அரவாணிகள் என்றால் யார்?
 
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )