Oct 21, 2011

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்


இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குபெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும்சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர்பெயர்சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச்சட்டங்களை தெரிந்து கொண்டால் மிக எளிதாகநாம் முடிவெடுத்து விடலாம்நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமானபெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்உங்கள் பெயர்களில்அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதுஅப்துல்லாஹ் (அல்லாஹ்வின்அடிமைமற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமைஆகியவையாகும்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (­லிநூல் : முஸ்லி­ம் (4320)

இறைவனுக்கு இணையானவராக காட்டும் வகையில் பெயர் சூட்டுவதைமிகக்கடுமையாக கண்டித்துள்ளார்கள்மேலும் இவ்வாறு பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும்எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்மறுமை நாளில்அல்லாஹ்வின் கோபத்துக்குரியஅவனிடம் மிகவும் கேவலமான மனிதர்யாரெனில், (உலகில்) 'மன்னாதி மன்னன்எனப் பெயரிடப்பட்ட மனிதர்தாம்.அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்தமன்னன் வேறுயாருமில்லை.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) நூல் : முஸ்லி­ம் (4339) புகாரி (6205)

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் ''அஸீஸ்'' (யாவற்றையும் மிகைப்பவன்என்று இருந்ததுஅவருக்கு நபியவர்கள் ''அப்துர்ரஹ்மான்'' (அளவற்ற அருளாளனின் அடிமைஎன்று பெயர் சூட்டினார்கள்.அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி­) நூல் : அஹ்மத் (16944)


ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன்நபி (ஸல்அவர்களிடம் வந்தார். (ஹானீஅவர்களை அவருடையகூட்டத்தினர் ''அபுல் ஹகம்'' (நீதிபதியின் தந்தைஎன்று புனைப் பெயர் சூட்டிஅழைப்பதை நபி (ஸல்அவர்கள் செவியேற்றார்கள்நபி (ஸல்அவர்கள்அவரை அழைத்து அல்லாஹ்தான் ''ஹகம்'' (நீதிபதிஆவான்அவனிடம் தான்''தீர்ப்பு'' உள்ளதுநீர் ஏன் ''அபுல் ஹகம்'' (நீதிபதியின் தந்தை)) என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டீர்என்று கேட்டார்கள்அதற்கவர் என்னுடையசமுதாயம் ஏதாவது ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள்என்றால் என்னிடத்தில் வருவார்கள்நான் அவர்களுக்கு மத்தியில்தீர்ப்பளிப்பேன்இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள் என்றுகூறினார்அதற்கு நபி (ஸல்இது அழகானதல்ல எனக் கூறிவிட்டு உனக்குகுழந்தைகள் இருக்கிறார்களாஎன்று கேட்டார்கள்அதற்கவர் எனக்குசுரைஹ்முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார்.அவர்களில் மூத்தவர் யார்என்று நபியவர்கள் கேட்டார்கள்அதற்கவர்சுரைஹ் என்று பதிலளித்தார்அதற்கு நபியவர்கள் நீ இனி ''அபு சுரைஹ்'' (சுரைஹின் தந்தைஎன்று அவருக்கு பெயர் சூட்டினார்கள்.நூல் : அபூ தாவூத்
 (4304
நபியவர்களின் புனைப் பெயரை வைப்பதின் சட்டம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள் கூறினார்கள்என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்.ஏனெனில்நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற 'அபுல் காசிம்ஆவேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (­லிநூல் : முஸ்­லிம் (4323)

ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அதுகுற்றம் கிடையாதுஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரானமுஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரைவைப்பது கூடாது என்றுதான் தடுத்துள்ளார்கள்நபி (ஸல்அவர்கள்கூறினார்கள் என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும்இணைத்து விடாதீர்கள்நிச்சயமாக நானே 'அபுல் காசிம்ஆவேன்நான்பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனைஎனக்குகொடுத்தான்.அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலிநூல் : அஹ்மத் (9226)


மேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும்வைத்திருந்தார்கள்அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டுநபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள்இதன்காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரைவைப்பதற்கு தடைவிதிக்கிறார்கள்



அனஸ் பின் மா­ரிக் (­ரிஅவர்கள்அறிவிக்கிறார்கள் : (ஒரு முறைநபி (ஸல்அவர்கள் கடைவீதியில்இருந்தார்கள்அப்போது ஒரு மனிதர் 'அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)''என்று கூறினார்நபி (ஸல்அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள்.அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) 'நான் இவரைத்தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)'' என்றார்அப்போது நபி (ஸல்அவர்கள்'எனதுபெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்எனது(லிஅபுல்காசிம் எனும்)குறிப்புப்பெயரை சூட்டிக்கொள்ளாதீர்கள்!'' என்றார்கள்.நூல் : புகாரி (2120)

இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடைஇன்றைய காலத்திற்கு பொருந்தாது.


எனவே ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால்குற்றமாகாது.ஒருவரை தீயவராக காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதைவெறுத்துள்ளார்கள்.



 என் தந்தை (ஹஸ்க்ஷ்ன் பின் அபீவஹ்ப் (ரலிஅவர்கள்நபி (ஸல்அவர்கüடம் வந்தார்கள்அப்போது நபி (ஸல்அவர்கள், ''உங்கள்பெயரென்ன?'' என்று கேட்டார்கள்அவர்கள், ''ஹஸ்க்ஷ்ன்'' (முரடுஎன்றுகூறினார்நபி (ஸல்அவர்கள், ''(இல்லைநீங்கள் (இனிமேல்) 'சஹ்ல்' (மென்மை)'' என்று சொன்னார்கள்அவர், ''என் தந்தை சூட்டிய பெயரை நான்மாற்றிக்கொள்ளமாட்டேன்'' என்றார்அதற்குப் பின்னர் எங்கள்குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கüல்முரட்டுத்தனம்நீடித்தது.அறிவிப்பவர் : முஸய்யப் பின் ஹஸ்க்ஷ்ன் (ரலிநூல் : புகாரி (6190)

அப்துல்லாஹ் பின் உமர் (­லிஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்'ஆஸியா' (பாவிஎனும் பெயரை மாற்றி விட்டு, ''நீ (பாவியல்ல), ஜமீலா(அழகி)'என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (­லிநூல் : முஸ்லிம் (4332)


இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா வாகும்இதுஅய்ன்ஸாத்யாதா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.


­ஃப்சீன்யாதா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரைவைத்துக் கொள்ளலாம்இது பிர்அவ்ன் உடைய மனைவி அன்னை ஆசியா(அலைஅவர்களின் பெயராகும்
நபி (ஸல்அவர்களிடத்தில் வந்த நபர்களில் ''அஸ்ரம்' (நன்மைகளைமுறிப்பவர்என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார்அவரிடம் நபி (ஸல்)அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள்அதற்கவர் ''அஸ்ரம்' (நன்மைகளை முறிப்பவர்என்று கூறினார்அதற்கு நபியவர்கள் இல்லை நீ''சுர்ஆ'' (விளைவிக்கும் பூமிஎன்று (அவருக்கு பெயர் சூட்டினார்கள்)அறிவிப்பவர் : உஸாமா பின் உஹ்தர் (ரலிநூல் : அபூதாவூத் (4303)

மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறுசெய்பவர்என்ற பெயர்கொண்ட ஒருவர் இஸ்லாத்தை தழுவினார்நபியவர்கள் அவரின் பெயரைமுதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்என்று மாற்றினார்கள்அவருக்குபெயர் மாற்றம் செய்ததையும்இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தைதழுவமாட்டார் கட்டுப்படுபவர்தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும்குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்மக்கா வெற்றிநாளின் போது நபி (ஸல்அவர்கள் கூற முதீவு (ரலிஅவர்கள்செவியேற்றார்கள் : (நபியவர்கள் கூறினார்கள்இந்த நாளுக்குப் பிறகுகுரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு)மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை '' (முதீவு) '' தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லைஅவரின்பெயர் ''ஆஸி'' (இறைவனுக்கு மாறு செய்பவர்என்று இருந்ததுஅவருக்குநபியவர்கள் ''முதீவு'' (கட்டுப்படக்கூடியவர்என்று பெயர் சூட்டினார்கள்.நூல் : அஹ்மத் (15446)

பஷீர் (ரலிஅவர்கள் நபி (ஸல்அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர்ஸஹ்ம் (நெருக்கடிஎன்று கூறினார்நபி (ஸல்அவர்கள் அவருக்கு பஷீர்(நற்செய்திஎன்று பெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர் : பஷீர் (ரலிநூல் : அஹ்மத் (20950)


தன்னைத் தானே பரிசுத்தப் படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதைதடைசெய்திருக்கிறார்கள்.
ஸைனப் (­லிஅவர்களுக்கு (முதரில்) 'பர்ரா' (நல்லவள்என்ற பெயர்இருந்ததுஅப்போது ''அவர் தம்மைத் தாமே பரிசுத் தப்படுத்திக்கொள்கிறார்''என்று (மக்களால்சொல்லப்பட்டதுஆகவேஅவருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடிஎன்றுபெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (­லிநூல் : முஸ்லிம் (4335)


நான் என் புதல்விக்கு 'பர்ரா' (நல்லவள்எனப் பெயர் சூட்டினேன்அப்போதுஸைனப் பின்த் அபீசலமா (­ரிஅவர்கள், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதரில்எனக்கு 'பர்ராஎன்ற பெயரே சூட்டப் பெற்றது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், ''உங்களை நீங்களேபரிசுத்தப்படுத்திக்கொள்ளாதீர்கள்உங்களில் நல்லவர் யார் எனஅல்லாஹ்வே நன்கறிந்தவன்'' என்று சொன்னார்கள்மக்கள், ''அவருக்குநாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?'' என்று கேட்டார்கள்அல்லாஹ் வின்தூதர் (ஸல்அவர்கள் ''அவருக்கு 'ஸைனப்எனப் பெயர் சூட்டுங்கள்''என்றார்கள்.நூல் : முஸ்லிம் (4337)

சில பெயர்கள் அழகிய பொருளூடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் 
கூறிஅழைக்கும் போது அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகியதன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலைஏற்படும்இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைதடைசெய்தார்கள்ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டுகொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.

(
நபி (ஸல்அவர்களின் துணைவியாரானஜுவைரியா (­ரிஅவர்களுக்கு(முத­ரில்) 'பர்ராஎன்ற பெயர் இருந்ததுஅவருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள் 'ஜுவைரியா' (இளையவள்எனப் பெயர் மாற்றினார்கள். 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள், 'பர்ரா'விடமிருந்து(நல்லவளிடமிருந்துபுறப்பட்டு விட்டார்கள்என்று சொல்லப்படுவதைஅவர்கள் வெறுத்தார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (­ரிநூல் : முஸ்லிம் (4334)


சமுரா பின் ஜுன்தப் (­லிஅவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற் றியாளன்), ரபாஹ்(இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்ஆகிய நான்குபெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்
நூல் : முஸ்லிம் (4328)


சமுரா பின் ஜுன்தப் (­லி)அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள், ''அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்சொற்கள்நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்துரில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ்(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர்(அல்லாஹ் மிகவும் பெரியவன்).இவற்றில் எதை நீர் முதரில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை'' என்றுகூறிவிட்டு, ''உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்என்றோரபாஹ்(இலாபம்என்றோநஜீஹ் (வெற்றி யாளன்என்றோஅஃப்லஹ்(வெற்றியாளன்என்றோ பெயர் சூட்ட வேண்டாம்ஏனெனில், (அந்தப் பெயர்சொல்ரி) 'அவன் அங்கு இருக்கி றானாஎன்று நீர் கேட்கும்போதுஅவன் அங்குஇல்லாவிட்டால் 'இல்லைஎன்று பதில் வரும். (அது திருப்தியளிப் பதற்குப்பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)'' என்றுகூறினார்கள்.அறிவிப்பாளர் சமுரா (­லிஅவர்கள் கூறுகிறார்கள்இவை நான்கு பெயர்கள்மட்டுமே ஆகும்இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்துநீங்கள் அறிவிக்க வேண்டாம்.நூல் : முஸ்லிம் (4330)


நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதை கண்டுகொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களி­ருந்துவிளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார்அவருக்கு ரபாஹ் (இலாபம்)என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.அறிவிப்பவர் : ஸலாமா (ரலிநூல் : அஹ்மத் (16542)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (­லிஅவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்)அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார்(சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம்எனத் தடை விதிக்க விரும் பினார்கள்பின்னர் அதைப் பற்றி எதுவும்கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்அதைப் பற்றி எதுவும்கூறவில்லை.

பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர்(ஸல்அவர்கள் இறந்துவிட்டார்கள்பிறகு (கலீஃபாஉமர் (­லிஅவர்கள்அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள்பின்னர் அவர்களும்(அவற்றுக்குத் தடை விதிக்காமல்விட்டுவிட்டார்கள்.நூல் : முஸ்லிம் (4331)

நம்முடைய குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது மேற்கண்டஅடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல்இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது.ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள்மற்றும் ஸஹாபி பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும்கிடையாதுஇவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.
மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச்சூட்டுமாறு கூறியுள்ளார்கள்ஆனால் பெண்களுக்கு பெயர் சூட்டும் போதுஎந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்துதான்வைக்க வேண்டும் என்பது மூட நம்பிக்கையாகும் . நபியவர்கள் அப்படி எந்தஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லைஒருவர் விரும்பினால் தன்னுடையமகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம்அதனுடன்இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம்ஆனால் இப்படி வைப்பதுதான்சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது பாவமானதாகும்.


0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )