Aug 1, 2012

ரமழான் & ஈத் சிந்தனை!


மகத்துவமிக்க ரமழான் மாதத்தின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த ரமழான் மாதத்தின் சிறப்புப் பற்றி சர்வ வல்லமை மிக்க இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஏகன் அல்லாஹ் வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் 2:185 வசனத்தில் இவ்வாறு கூறி தெளிவுபடுத்துகிறான்.
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியை தெளிவாக்கக் கூடியதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்க வேண்டும்; எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறான்; உங்களுக்கு சிரம மானதை அவன் நாடவில்லை; (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்கா கவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (2:185)
அல்லாஹ்வுக்கும் நமக்கு இடையில் இடைத்தரகர்களாக எந்த மவ்லவி, ஆலிம், அல்லாமாவையும் கொள்ளக் கூடாது என்று அடுத்த வசனமான 2:186 இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “”நிச்சயமாக நான் சமீப மாகவே இருக்கிறான்; அழைப்போரின் அழைப் பிற்கு அவர் அழைக்கும்போது விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என் னையே நம்பட்டும்; அப்பொழுது அவர்கள் நேர் வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக! (2:186)
அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதரும் மார்க்கத்தைத் தெளிவாக விளக்கிய பின்னர் மனிதர்களில் கலீஃபாக்கள், நபிதோழர்கள், ஸலஃபுகள், இமாம்கள்,அவுலியாக்கள், முன் னோர்கள், (பார்க்க 2:134,141)
பின்னோர்கள், இன்றுள்ளோர்கள் என எவரது தத்துவ விளக் கத்தையும், சுய விளக்கத்தையும் மார்க்கமாக ஒருபோதும் ஏற்கக் கூடாது என்று 18:102-106, 33:36 இறைவாக்குகளில் திட்டமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். அது பெரும் வழிகேடு; நரகில் கொண்டு சேர்க்கும் என்றும் திட்டமாக அறிவித்துள்ளான்.
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். (18:102) (மேலும் பார்க்க : 18:103-106)
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட் டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு-நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (33:36) (மேலும் பார்க்க: 33:66-68)
2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 இறைவாக்குகள் “தாஃகூத்’ எனக் குறிப்பிட்டுக் கூறும் மனித ஷைத்தான்களாகிய வரம்பு மீறும் மதகுருமார்களை வழிகாட்டிகளாக ஒரு போதும் கொள்ளக் கூடாது, அல்லாஹ்வையும், அவனது கண்காணிப்பில் இருந்த இறுதித் தூதரையும் மட்டுமே வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனங்களை மீண்டும் மீண்டும் கற்றுச் சிந்தித்து விளங்கி நடக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “”அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணியுங்கள்; தாஃகூத்களை (மனித ஷைத்தான்களாகிய மதகுருமார்களை) விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்….” (16:36)
“”தாஃகூத்” எனும் மனித ஷைத்தான்களாகிய மதகுருமார்கள் அற்ப உலக ஆதாயங்களையும், பட்டம் பதவிகளையும் நோக்கமாகக் கொண்டு, தலைமைத்தனத்திற்கு ஆசைப்பட்டு, போட்டி பொறாமை காரணமாகவே 21:92, 23:52 இறை வாக்குகள் கூறும் ஒன்றுபட்ட சமுதாயத்தை சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் மத்ஹபுகள், தரீக்காக்கள் என முகல்லிதுகளாகவும், ஃகைர முகல்லிதுகள், குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுபவர்கள் எனக்கூறி அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ இத்தியாதி, இத்தியாதி புதுப்புதுப் பெயர்களை இவர்களாகச் சூட்டிக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து முஸ்லிம்களை நரகை நோக்கி நடை போட வைக்கிறார்கள். காதியானிகள் இறுதி நபிக்குப் பிறகு ஒரு பொய் நபியைக் கற்பனை செய்து கொண்டு தாஃகூத்களாகச் செயல்பட்டு புதியதொரு பிரிவைக் கற்பனை செய்து அவர்களை நம்பியுள்ள மக்களை நரகிற்கு இட்டுச் செல்கின்றனர். (பார்க்க : 7:71, 12:40, 53:23)
சமுதாயத்திலுள்ள எண்ணற்றப் பிரிவுகளுக்குக் காரணம் தாஃகூத் எனும் மனித ஷைத்தான்களாகிய இந்த மதகுருமார்களிடையே ஏற்படும் போட்டி, பொறாமை, பதவி, ஆசை அற்ப உல கியல் ஆதாயம் போன்றவையே. இந்த உண் மையை 2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17,18, 47:25 இறைவாக்குகளை நீங்களே சுய சிந்த னையுடன் படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.
அவர்களுக்கு (மார்க்கத்தில்) தெளிவான கட் டளைகளைக் கொடுத்தோம். எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (நெறிநூல்) ஞானம் வந்த பின் னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண் டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார் களோ அதில் கியாம நாளில் அவர்களடையே தீர்ப்புச் செய்வான்.
இதன் பின்னர் உம்மை ­ரீஅத்தில் ஒரு நேரான வழயில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக. அன்றியும் அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். (45:17,18)
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவான பின், தம் முதுகு களைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கிவிட்டான். (47:25)
45:18ல் காணப்படும் “”அன்றியும் அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங் களைப் பின்பற்றாதீர்” என்ற நபிக்கே அல்லாஹ் வால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை நாம் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான தாஃகூத் எனும் மனித ஷைத்தான்களாகிய மதகுருமார் கள் இறுதி நபியையே வழிகெடுக்க முற்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வழிகெட்ட போத னைகள் நபியின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தன.
இந்த உண்மையை குர்ஆன் 17:73,74,75, 69:44, 45,46,47 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. நபிமார்களையே தாஃகூத்களான மதகுருமார்கள் அலைக்கழித்திருக்கிறார்கள் என்றால் நம் போன்ற சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
எனவே அல்குர்ஆனின் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்களில் அணு வல்ல, அணுவின் முனை அளவும் தத்துவ விளக் கம் என்ற பெயராலும் சுய விளக்கம் என்ற பெயராலும், 33:36 எச்சரிப்பது போல் வேறு கருத்துக் கொள்ள அனுமதியே இல்லை. அப் படி இந்த மதகுருமார்கள் வேறு கருத்துக்களை எடுத்து வைக்கும்போது ஷைத்தான் அதை நமக்கு அழகாகக் காட்டத்தான் செய்வான்.
அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை விட ஷைத்தானின் சுய விளக்கம் ஆதம்(அலை) அவர்களை மயக்கியது போல், ஹுதைபியா உடன்படிக்கையின் போதும், நபி(ஸல்) இறந்த சமயத்திலும், சிறப்புமிக்க உமர்(ரழி) அவர் களையே தடுமாறச் செய்தது போல், ஷைத்தா னுக்கு இம்மதகுருமார்களான தாஃகூத்கள் மூலம் சாதாரண மக்களை மதி மயங்கச் செய்து அவர்களை நரகிற்கு இட்டுச் சென்று நரகை நிரப்பித் தனது சபதத்தை நிறைவு செய்வது இயலாத காரியமா? சிந்தியுங்கள்! 4:119-121, 7:20-22, 15:31-44, 16:63, 32:13, 11:118,119 குர்ஆன் வசனங்களை இந்த ரமழான் மாதத்தில் நேரடியாக நீங்கள் மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்துக் கற்றுத் தெளிந்து உணர்வு பெறுங்கள்,
4:49, 53:32 இறைவாக்குகளை நீங்கள் நேரடி யாகப் படித்து விளங்கினால், நான்தான் நேர்வழி நடக்கிறேன் என்பவன் உறுதியாக கோணல் வழியில் செல்கிறான், நான் ஆலிம் என்பவன் உறுதியாக ஜாஹில்-மூடன் என்பதை யும், நான் தவ்ஹீத்வாதி என்பவன் உறுதியாக ´ஷிர்க்வாதி என்பதையும் நீங்களே விளங்கிக் கொள்ளளாம்.
தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான, நாங்கள் தான் மார்க்க அறிஞர்கள் என்று பெருமை பேசும் இம் மதகுருமார்கள் பற்றி இவ்வளவுத் தெளிவாக அல்லாஹ் விளக்கி இருந்தும் இந்த வசனங்கள் அனைத்தையும் நிரா கரித்து விட்டு, இம்மதகுருமார்கள் பின்னால் செல்கிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு இந்த மதகுருமார்களைச் சபித்தும், அவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுக் கும்படி அல்லாஹ்விடம் வேண்டியும் பிரலா பிப்பதை குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:26-29, 43:36-45, இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.
அன்று அரபு மொழி தெரிந்தவர்களை 41:26 வசனம் கூறுவது போல் குர்ஆனை செவியுறா மல் தடுத்த அன்றைய குறைஷ் மதகுருமார்களான, காஃபிர்களான நிராகரிப்பாளர்களுக்கும், மவ்லவி அல்லாத பொதுமக்கள் குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்க முடி யாது. குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படிக்காதீர்கள்; அரபியில் குர்ஆனை ஓதி வாருங்கள், குர்ஆனை தமிழில் படிப்பது பித்அத், குர்ஆனை ஒளூ இல்லாமல் தொடுவது ஹராம் என்று மூடத்தனமாகக் கூறி பொது மக்களை குர் ஆனின் கருத்துக்களை அறியவிடாமல் தடுக்கும் இன்றைய மதகுருமார்களுக்கும் அணுவளவும் வேறுபாடு இல்லை. அரபி மொழி தெரிந்தவர் களுக்கே குர்ஆன் விளங்கும் என்றால் அம் மொழியில் விற்பன்னர்களான தாருந்நத்வா மதகுருமார்களுக்கு குர்ஆன் ஏன் விளங்கவில்லை? ஜாஹில்கள்-மூடர்கள், அபூஜஹீல் – மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டார்கள் என்ற அற்ப அறிவும் இல்லாத மூடர்கள் தங்களை அறிஞர்கள் என மார் தட்டலாமா? அவர்கள் எப்படி நிராகரிப் பாளர்களோ, அதேபோல் இந்த மவ்லவிகளும் நிராகரிப்பாளர்களே. எனவே 41:26-29 இறை வாக்குகள் தாஃகூத்களான இன்றைய மதகுருமார்களுக்கு மிகமிகப் பொருந்தும்.
அரபி மொழி தெரிந்தவர்களுக்கு மட்டு மல்ல; ஆதத்தின் சந்ததிகளான அனைத்து மக்க ளுக்கும் குர்ஆனை தெள்ளத் தெளிவாக, நேரடியாக எவ்வித சந்தேகத்திற்கும் இட மில்லாமல் முரண்பாடற்ற நிலையில் விளக்கி இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் பல இடங் களில் நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் கூறிய இருக்க, இந்த இறைவாக்குகள் அனைத் தையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ் மனிதர்களுக்காக விளங்கியுள்ளது உங்களுக்கு விளங்காது; நாங்கள் விளக்கித்தான் பொதுமக்களாகிய நீங்கள் விளங்க முடியும் என்று ஆணவம், மமதை பேசும் இம்மவ்லவிகள் நாளை மறுமையில் முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுவார்கள் என்ற ஹதீஃதை கண்டுகொள்ளாத பெரும் பாவிகள். இவ்வானத்தின் கீழ் இந்த மவ்லவிகளை-மத குருமார்களை விட கேடுகெட்டப் பிரிதொரு படைப்பு இருக்க முடியாது. காரணம்?
அல்லாஹ் விளக்கியது உங்களுக்கு விளங்காது, நாங்கள் விளங்கித்தான் விளங்க முடியும் என்று கூறும் இம்மவ்லவிகள் அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்க இன்னொரு அல்லாஹ்வாகத் தான் தங்களை நம்பமுடியும்! (நவூதுபில்லாஹ்) இப்படி ஆணவம் பேசும் இந்த மவ்லவிகளை எவ்வளவு கடுமையாகத் தண்டிப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள். 42:21, 49:16 இறை வாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும், அல்லாஹ்வுக்கே இணையாளர்கள் ஆகும் பெரும் பாவிகளாக இவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? அதனால் தான் மறுமையில் விசாரணை ஆரம்பித்தவுடனேயே முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுகிறவர்களாக இந்த மவ்லவிகள் இருக்கிறார்கள். 2:159-162, 42:21, 49:16 போன்ற இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்துச் சிந்தியுங்கள். 33:36 இறைக் கட்டளைப்படி எமது சுய விளக்கத்தையோ ஆலிம்கள் என அகந்தை, பெருமை பேசும் மவ்லவிகளின் சுயவிளக்கத்தையோ ஏற்காமல் குர்ஆன் வசனங்கள் நேரடியாக என்ன கூறுகின்றனவோ அவற்றை அப்படியே ஏற்று செயல்பட முன்வாருங்கள். அதுவே நேர்வழி நடப்பதாகும்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )