Nov 11, 2014

இஸ்லாத்தில் தொழுகையின் நிலை

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)
 
“என்னைத் தொழக் கண்டவாரே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.
 
‘அஸ்ஸலாத்” (தொழுகை) அரபிப் பதத்திற்கு “அத்துஆஉ” (பிரார்த்தனை) என்பது பொருள். மார்க்க ரீதியில் தக்பீரைக் கொண்டு துவங்கி, ஸலவாத்தைக் கொண்டு நிறைவுபெறும் குறிப்பிட்ட சொற்செயலைக் கொண்டதோர் வணக்க வழிபாடு என்பதாகும்.
 
இஸ்லாத்தில் தொழுகையின் நிலை:
 
இஸ்லாத்தில் தொழுகை என்பது ஏனைய வணக்க வழிபாடுகளுக்கு மத்தியில் ஒப்பற்ற உன்னத ஸ்தானம் வகிப்பதோடு, அதன் இன்றியமையாத் தூணாகவும் திகழ்கிறது. இதுவே வணக்க வழிபாடுகளில் முதன்மையாகக் கடமையாக்கப்பட்டுள்ள முக்கிய அனுஷ்டானங்களாகும்.
அனஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவு வழி நடத்தப்பட்ட (மிஃராஜின்) போது, 50 ஆகக் கடமையாக்கப்பட்டு, பின்னர் அவற்றைக் குறைத்து 5 ஆக்கப்பட்டது. பின்னர் “முஹம்மதே” என்று அழைக்கப்பட்டு நிச்சயமாக என்னிடம் சொல்லில் மாற்றம் ஏதும் செய்யப்பட மாட்டாது. உண்மையாக உமக்கு இவ்வைந்து (நேரத் தொழுகை)க்கும் 50(நேரத் தொழுகையின் கூலி உண்டு என்று கூறப்பட்டது. (நஸயீ, திர்மதீ,அஹ்மத்)
 
மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியே!
மறுமையில் மனிதனிடம் தொழுகையைப் பற்றியே முதலில் விசாரணை செய்யப்படும் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “அது முறையாயிருப்பின் அனைத்து அமல்களும் முறையாக அமையும். அது மோசமடைந்து விடின் அனைத்து அமல்களும் மோசமடைந்து விடும் என்டறு கூறினார்கள். அப்துல்லாஹ் பின் கர்த்(ரழி), தப்ரானீ.
 
தொழுகையைப் பற்றி அல்குர்ஆன்:
 
தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத் தொழுகையையும், நீங்கள் (முறையாகத்) தொழுது கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்விடம் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (2:238)
 
தொழுகையை விடுவதே நரகம் செல்வதற்கான முதற்காரணமாகும்:
 
“(அவர்கள்) சுவனபதிகளில் இருந்து கொண்டு உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என்று குற்றவாளிகளைக் (நோக்கி) கேட்பார்கள். அதற்கவர்கள் “நாங்கள் தொழக்கூடியவர்களில் (ஒருவராக) வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் (சேர்ந்து) நாங்களும் மூழ்கிக் கிடந்து விட்டோம். கூலி கொடுக்கும் இத்தனையும் பொய்யாக்கிக் கொண்டிருந்தோம்” (என்று கூறுவர்) (74:40-46)
 
தொழுகையைப் பற்றி அல்ஹதீஸ்:
தொழுகையை விட்டவர் காபிராகி விடுவர் என்ற மிகக் கடுமையான எச்சரிக்கை:
(மூமினான) மனிதருக்கும், குப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவதே வித்தியாசமாகும். மற்றொரு அறிவிப்பில் ஈமானுக்கும், குப்ருக்கும் இடையே வித்தியாசமே தொழுகையை விடுவது தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி),முஸ்லிம், திர்மதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
 
முறையாகத் தொழாதோர் மறுமையில் கொடும்பாவிகளின் கூட்டத்தில் இருப்பர்:
 
அப்துல்லாஹ் பின் அம்ருப்னுல் ஆஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றி கூறும்போது எவர் அதை முறையாகப் பேணித் தொழுவாரோ அவருக்கு அது மறுமை நாளில் பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், ஈடேற்றமாகவும் அமைந்துவிடும். எவர் அதைப் பேணித் தொழவில்லையோ, அவருக்கு அது பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ ஆகமாட்டாது; எனினும் அவர் மறுமை நாளில் (கொடும்பாவிகளான) காரூன், பிர்அவ்ன், ஹாமான், உபையு பின் கலஃப் ஆகியோருடன் இருப்பார். (உஹ்மத்)
 
உப்பாத துப்னு ஸ்ஸாமித்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். அல்லாஹ் தனது அடியார்கள் மீது ஐந்து (நேரத்) தொழுகைகளை கட்டாயக் கடமையாக்கியுள்ளான் எவர் அவற்றின் கடமையை அலட்சியம் செய்து, அவற்றில் எதனையும் பாழ்படுத்தி விடாது, முறையோடு அவற்றை நிறைவேற்றி வருகிறாரோ, அவரை சுவர்க்கத்தில் புகுத்தும் பொறுப்பு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும்.
 
யார் அவற்றை நிறைவேற்றவில்லையோ, அவருக்கு அல்லாஹ்விடம் எப்பொறுப்பும் கிடையாது. அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான். (மாலிக், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )