Dec 23, 2011

அழகிய துஆக்கள்


தூங்குவதற்கு முன்
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி(மேற்கண்ட ஏதேனும் ஒன்றை கூறலாம்)
யா அல்லாஹ்! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! யா அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும் விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இன்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அவை உன் கையில்தான் உள்ளது. யா அல்லாஹ் நீயே முதல்வன் உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன் உனக்கு பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். எதுவும் உனக்குமேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். எதுவும் உனக்கு கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களை செல்வந்தர்களாக்குவாயாக! நூல்: புகாரி
யா அல்லாஹ்! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். உன் பெயரால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்: புகாரி
யா அல்லாஹ்! நீயே தூயவன். உன்னால்தான் எனது உடலை சாய்க்கிறேன். உன்னால்தான் அதை உயர்த்துகிறேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்ல அடியார்களை பாதுகாப்பதுபோல் அதையும் பாதுகாப்பாயாக! நூல்:முஸ்லிம்
தூங்குவதற்குமுன் ஆயத்துல் குர்ஸீயை ஓதிக்கொண்டால் விடியும்வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகாரி
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். அல்குர்ஆன் 2:255
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்கு செல்லும்போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து அல்குர்ஆன்  112,113,114  அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். நூல்: புகாரி
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌاللَّهُ الصَّمَدُلَمْ يَلِدْ وَلَمْ يُولَدْوَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ  
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَوَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِوَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ  
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ
பகரா அத்தியாத்தின் கடைசி இரு வசஙனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّه ِِ وَالْمُؤْمِنُونَ كُلّ ٌ آمَنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِه ِِ وَكُتُبِه ِِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَد ٍ مِنْ رُسُلِه ِِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِير
இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். அல்குர்ஆன் 2:285

لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسا ً إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرا ًكَمَا حَمَلْتَه ُُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِه ِِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَىالْقَوْمِ الْكَافِرِينَ
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" அல்குர்ஆன் 2:286
யா அல்லாஹ்! என் முகத்தைச் உனக்கு கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன்பக்கம் சாய்த்து விட்டேன். உனது (அருளில்) நபிக்கை வைத்து விட்டேன்.உனது (உனது தண்டணைக்கு)அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. யா அல்லாஹ்! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். நூல்: புகாரி
 
தூங்கி விழித்தபின்
நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆதாரம்: முஸ்லிம்
All praise is for Allah who gave us life after having taken it from us and unto Him is the resurrection
என் உடலில் ஆரோக்கியத்தை தந்து, என் உயிரையும் எனக்கு திருப்பி தந்து, அவனை நினைவு கூர்வதற்கு எனக்கு அனுமதியும் வழங்கியவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! நூல்: திர்மிதீ 5/473
All praise is for Allah who restored to me my health and returned my soul and has allowed me to remember Him.

வீட்டிலிருந்து புறப்படும்போது
بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله
அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah
اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ .

யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா

‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally
வீட்டினுள் நுழையும்போது
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .
அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.


உளுச் செய்யும்முன்
بِسْمِ الله
அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு - In the name of Allah.
உளுச் செய்தபின்
أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
I bear witness that none has the right to be worshipped except Allah, alone without partner, and I bear witness that Muhammad is His slave and Messenger.’
اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.
அல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ
O Allah, make me of those who return to You often in repentance and make me of those who remain clean and pure.
سُبْحـانَكَ اللّهُـمَّ وَبِحَمدِك أَشْهَـدُ أَنْ لا إِلهَ إِلاّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَـيْك .
யா அல்லாஹ்! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன். உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன். நூல்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா
How perfect You are O Allah, and I praise You, I bear witness that none has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn in repentance to You.
 
உண்ணும்முன், பருகும்முன்
بِسْمِ اللَّهِ
அல்லாஹ்வின் பெயரால் - In the Name of Allah
اللَّهُمَّ بَارِكْ لَنا فِيهِ وَ اَطْعَمْنَا خَيْرًا مِنْه
அல்லாஹ்! அதில் எங்களுக்கு நீ அபிவிருத்தி செய்வாயாக! அதைவிடச் சிறந்ததை எங்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக! நூல்: திர்மிதி 5/506
O Allah! Bless us in it and provide us with better than it
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللَّهِ فِي اَوَّلِهِ وََآخِرهِ
அல்லாஹ்வின் பெயர் கொண்டு அதன் தொடக்கம் அதன் முடிவு நூல்கள்: அபூதாவூத் 3/347 திர்மிதி 4/288
In the Name of Allah, in the beginning and in the end

உணவு உண்டபின்
الْحَمدُ للَّهِ الَّذِي اطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ
என்னிலிருந்து என் முயற்சியின்றி என் பலமின்றி எனக்கு உண்ணக்கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
Praise be to Allah who has given me this food, and sustained me with it, though I was unable to do it and powerless
உணவளித்தவருக்காக
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُم
யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக! நூல்: முஸ்லிம் 3/1615
O Allah! Bless them in what You have provided for them, and forgive them and have Mercy on them
اللَّهُمَّ اطْعِمَّ مَنْ اطْعَمَنِي وَاسْقِِِ ِ مَنْ سَقَانِي
அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக! நூல்: முஸ்லிம் 3/126
O Allah! Feed him who fed me and give him drink who gave me to drink

வீட்டிலிருந்து புறப்படும்போது
بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله
அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah
اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِكَ أَنْ أَضِـلَّ أَوْ أُضَـل ، أَوْ أَزِلَّ أَوْ أُزَل ، أَوْ أَظْلِـمَ أَوْ أَُظْلَـم ، أَوْ أَجْهَلَ أَوْ يُـجْهَلَ عَلَـيّ .

யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது வழி தவறச் செய்யப்படல், அல்லது பிசகிவிடுதல், அல்லது நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது நான் அந்நிதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனாக ஆகிவிடல் அல்லது அறிவீனனாக ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் காவல் தேடுகிறேன். நூல்கள்: சஹீஹ் திர்மிதீ, ஸஹீஹ் இப்னுமாஜ்ஜா

‘O Allah, I take refuge with You lest I should stray or be led astray, or slip or be tripped, or oppress or be oppressed, or behave foolishly or be treated foolishly.’ slip: i.e. to commit a sin unintentionally
வீட்டினுள் நுழையும்போது
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .
அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.
 
பள்ளிவாசலுக்குள் நுழையும்போது
யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!
Oh Allah! Open for me the gates of Your mercy
பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது
யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்
O Allah! I am asking You to give me from Your Bounty
 
சபையை முடிக்கும்முன்

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: திர்மிதீ

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: நஸயீ



துக்கம் கவலையின்போது
அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158
சங்கடம் நீங்க
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை, மகத்தானவன் சகிப்புத்தன்மையுடையவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. அர்ஷை உடையவன், வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. (அவன்) வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன். இன்னும் சங்கையான இரட்சகன். நூல்கள் புகாரி 7/154 முஸ்லிம் 4/2092
யா அல்லாஹ்! உன் அருளையே ஆதரவு வைக்கிறேன். ஆகவே கண் இமை மூடும் அளவிற்குக்கூட என்னை என் மனதின்பால் ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடைய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்கு நீ சீராக்ககி வைப்பாயாக! வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு) இல்லை. நூல்கள்: அபூதாவூத் 4/324 அஹ்மத் 5/42
உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். அல்குர்ஆன் 21:87
அல்லாஹ், அல்லாஹ்வே என் இரட்சகன், அவனுக்கு எப்பொருளையும் நான் இணையாக்கமாட்டேன். நூல்கள்: அபூதாவூத்2/87 இப்னுமாஜ்ஜா 2/335
 
தீயவர்களிடமிருந்து பாதுகாப்பு
அவன் யா அல்லாஹ்! நிச்சயமாக நாம் அவர்களுடைய தொண்டைக் குழிகளில் உன்னை ஆக்குகிறோம். அவர்களுடைய தீமைகளிலிருந்தும் உன்னைக்கொண்டு நாங்கள் காவல் தேடுகிறோம். நூல்:அபுதாவூத் 2/89
அவன்அல்லாஹ் நமக்கு போதுமானவன், இன்னும் (அவன்) மிக நல்ல பொருப்பாளன். நூல்: புகாரி 5/172
வேதத்தை இறக்கி வைத்தவன், துரிதமாக கணக்கு தீர்ப்பவனாகிய யா அல்லாஹ்! எதிரிகளை தோற்கடிப்பாயாக! யா அல்லாஹ்! அவர்களை தோற்கடிப்பாயாக! இன்னும் அவர்களை உலுக்கி விடுவாயாக! னூல்: முஸ்லிம் 3/162
ஒரு கூட்டத்தாரை கண்டு பயந்தவருக்கு
யா அல்லாஹ்! நீ நாடியதைக்கொண்டு அவர்களுக்கெதிராக எனக்குப் போதுமானவனாக இருப்பாயாக! நூல்: முஸ்லிம் 4/2300
 
கடன் நிறைவேற
யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைச் கொண்டு உன்னல்லாதவரை விட்டும் என்னை தெவையற்றவனாக ஆக்குவாயாக! நூல்கள்: திர்மிதி5/560 ஸஹீஹ் திர்மிதி 3/180
யா அல்லாஹ்! தூக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல் ஆடவர்கள் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்: புகாரி 7/158
காரியம் சிரமமானால்
யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்
 
காற்று வீசுகின்றபோது
யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்கள்: அபூதாவூத் 4/326 இப்னுமாஜா 2/1228
இடி இடிக்கின்றபோது
அவன் தூயவன் எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992
மழை வேண்டி கேட்பது
யா அல்லாஹ்! உதவியாக இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!
யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! நூல்கள்: புகாரி 1/224 முஸ்லிம் 2/613
யா அல்லாஹ்! உன்னுடைய அடியார்கள் மற்றும் உன்னுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டுவாயாக! உன்னுடைய அருளை பெருகச் செய்வாயாக! அழிந்துவிட்ட உன்னுடைய ஊரை உயிர்பிக்கவும் செய்வாயாக! நூல்: அபூதாவூத் 1/305

மழை பெய்கின்ற போது
பயன் தரக்க்கூடிய மழையாக யா அல்லாஹ் (நீ ஆக்கி வைப்பாயாக!) நூல்: பத்ஹுடன் புகாரி 2/518
மழை பெய்த பிறகு
அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனின் அருளால் நாங்கள் மழை பெய்விக்கப்பட்டோம். நூல்கள்: புகாரி 1/205 முஸ்லிம் 1/83
தலைப்பிறையை காணும்போது
அல்லாஹ் மிகப்பெரியவன், யா அல்லாஹ்! அமைதி, ஈமான் சாந்தி இஸ்லாம் ஆகியவற்றைக் கொண்டு மற்றும் எங்கள் இரட்சகா! நீ விரும்பி மற்றும் பொருந்தி கொண்டவற்றுக்கு நல்லுதவி செய்வது கொண்டு அதை எங்கள் மீது உதிக்கச் செய்வாயாக! (பிறையே!) எங்களுடைய இரட்சகன் மற்றும் உன்னுடைய இரட்சகள் அல்லாஹ் ஆவான். நூல்: திர்மிதி 5/504

 
நோயாளியை நலம் விசாரிக்கும்போது
எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் பாவம்) பரிசுத்தமாகும். நூல்: பத்ஹுடன் புகாரி 10/118
மிகப்பெரிய சிம்மாசனத்தை உடையவனாகிய மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியத்தை நல்குமாறு நான் கேட்கிறேன். நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்
யா அல்லாஹ்! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குப்வனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத்தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! நூல்: புகாரி 5742
கவலை வேண்டாம் அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். நூல்: புகாரி 3616
 
மரணத்திற்கு நிகராண துன்பத்தின்போது
யா அல்லாஹ்! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! நூல்: புகாரி 5671,6351
மரணத்தை அறிந்த நோயாளிக்கு
யா அல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு அருளும் செய்வாயாக! மிக்க உயர்ந்தோனாகிய நன்பனுடன் என்னை நீ சேர்த்தும் வைப்பாயாக! நூல்கள்: புகாரி 7/10, முஸ்லிம் 4/1891
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; நிச்சயமாக மரணத்திற்கு பல சங்கடங்கள் உண்டு. நூல்: பத்ஹுடன் புகாரி
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அல்லாஹ்வே மிகப்பெரியவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; (பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை. திர்மிதீ, இப்னுமாஜா

 
கப்ருகளை ஜியாரத் செய்யும்போது
இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்களே. நூல்: முஸ்லிம் 367
இறந்தவருக்காக செய்யும் துஆ
யா அல்லாஹ்!......... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! நூல்: முஸ்லிம் 1528

பிரயாணத்தின்போது

 
அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 2392
பிரயாணத்திலிருந்து திரும்பும்போது
அல்லாஹ்! இதில் நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: முஸ்லிம் 1496
வெளியூரில் தங்கும்போது
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்து தீங்கின் விட்டும் அவனிடமே பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: முஸ்லிம்4881, 4882
மேட்டில் ஏறும்போது
அல்லாஹ் மிகப்பெரியவன்
மேட்டிலிருந்து இறங்கும்போது
அல்லாஹ் பரிசுத்தமானவன்


மணமக்களை வாழ்த்த
அல்லது
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக! உம்மீதும் பரகத் செய்வானாக! நலவானவற்றில் உங்களிருவருக்கிடையே அவன் இணைத்தும் வைப்பானாக! நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
மனைவியிடம் செல்வதற்கு முன்பு
அல்லாஹ்வின் பெயரால், யா அல்லாஹ்! ஷைத்தானை எங்களை விட்டும் தவிர்ப்பாயாக! எங்களுக்கு நீ வழங்குவதிலும் ஷைத்தானை தவிர்ப்பாயாக! நூல்கள்: புகாரி 6/141 முஸ்லிம் 2/1028


வித்ரு தொழுகையில் ஓதும் குனூத் துஆ
யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டு. நீ யாருக்கு இடர்களை களைந்தாயோ அவர்களுடன் எனது இடர்களையும் களைவாயாக! நீ யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்கு வழங்கியதில் பரகத் செய்வாயாக! நீ செய்த முடிவின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாயாக! நீ தான் முடிவு எடுப்பவன். உன் விஷயத்தில் யாரும் முடிவு எடுக்க முடியாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயோ அவர் இழிவடைவதில்லை. எங்கள் இறைவா! நீ உயர்ந்தவன், பாக்கியமிக்கவன். நூல்: திர்மிதி


இருப்பில் ஓதும் கடைசி துஆ
இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்:புகாரி 833
இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய். நூல்:புகாரி 833,6326,7388
நான் முந்திச் செய்ததையும் பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாக் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன் நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நூல்: திர்மிதி 3343


கடமையான தொழுகைக்குப்பின்
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன்(3 முறை) யா அல்லாஹ்! நீயே சாந்தி அளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன். நூல்: முஸ்லிம் 931
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது. நூல்: புகாரி 844, 6330
யா அல்லாஹ்! கோழத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தள்ளாத வயதுவரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: புகாரி 2822
யா அல்லாஹ்! உன்னிஅ நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக! நூல்: அபூதாவூத்
சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹ் அக்பர் 33 (மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் அக்பர் 34 தடவை என்றும் உள்ளது) தடவையும். ஆக மொத்தம் 99 தடவைக்குப்பின் 100 வதாக
எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )